|
போகுதையா பூந்தேரு
பூலோகம் தெத்தளிக்க
இண்டு மணக்குதையா
இடுகாடு பூமணக்கும்
வாயை மணக்குமையா
வைகுண்டம் பூமணக்கும்
இடு காடு தேரிறக்கி
எமலோகம் போறேனிண்ணார்
சுடுகாடு தேரிறக்கி
சொர்க்க லோகம் போறேனிண்ணார்
தேரை விட்டுக் கீழிறக்கி
செல்ல மக்கள் வந்து கூடி
பொன்னரசி கையிலெடுத்து
போட்டார்கள் வாய்க்கரிசி
சந்தனக் கட்டை வெட்டி
சதுருடனே தீ மூட்டி
கொள்ளி வச்சி குடமுடைச்சி
கோலவர்ணத் தேரவுத்து
செலவு தொகை தான் கொடுத்து
செல்ல மகன் தலைமுழுகி
சிவ சிவா என்று சொல்லி
திருநீறும் தானணிந்தார்.
குறிப்பு
:
இதில்
சாவுச் சடங்குகள் வரிசையாகச் சொல்லப்படுகின்றன.
|
சேகரித்தவர்
:
S.S. போத்தையா |
இடம்:
விளாத்திக்குளம்,
நெல்லை மாவட்டம். |
|