முகப்பு | 773 |
சந்திப்பு. சீவகசிந்தாமணி பதிப்பு ஆரம்பம், ஜைன நண்பர்கள் தொடர்பு. | |
1883 | திருக்குடந்தைப் புராணப் பதிப்பு, |
1884 | பரம்பரைச்
சொத்தாகிய நிலத்தை ஒற்றியிலிருந்து மீட்டது. முதற் தடவை சென்னை வருகை. |
1885 | மகாமகம்.
திருவாவடுதுறை மகாசந்நிதானம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்கள் தந்தையாருக்கும் ஐயரவர்களுக்கும் பீதாம்பரம் அளித்ததுடன் ஐயரவர்கள் குமாரர் கலியாணசுந்தரையருக்கும் சந்திரஹாரம் என்னும் பொன்னாபரணம் அளித்தது. |
1887 | சீவகசிந்தாமணி பதிப்பித்து முடிந்து,தமிழுலகில் உலாவ ஆரம்பித்தது. |
1888 | திருவாவடுதுறை
மகாசந்நிதானம் பரிபூரணம் எய்தியது. தியாகராச செட்டியார் மறைவு; நெல்லை மாவட்டத்தில் ஏடுதேடத் தொடங்கியது. |
1889 | பத்துப்பாட்டு
அச்சிட்டு நிறைவேறியது. சிலப்பதிகாரப் பதிப்பு ஆரம்பம். சென்னைக்கு வந்து பூண்டி அரங்கநாத முதலியார் இயற்றிய “கச்சிக்கலம்பகம்” அரங்கேற்றத்தில் கலந்து கொண்டது. |
1891 | சீவகசிந்தாமணி
புத்தகத்தைக் கண்டு பாரிஸ் பேராசிரியர் ஜூலியோன் வின்ஸோன் அவர்கள் பாராட்டி எழுதியது. குமாரனுக்கு உபநயனம். |
1892 | சேலம் இராமசாமி
முதலியார் மறைவு. சிலப்பதிகாரம் பதிப்பித்து முடிந்தது. பாஸ்கர சேதுபதி அவர்களின் அழைப்பின் பேரில் இராமநாதபுரம் சென்று நவராத்திரி விழாவில் கலந்து கொண்டது. |
7-10-1893 | தந்தையார் மறைவு |
10-12-1893 | பூண்டி அரங்கநாத முதலியார் மறைவு |
27-1-1893 | மகாவைத்தியநாதையர் நிரியாணம் |
1894 | புறநானூறு பதிப்பு.
பாண்டித்துரைத் தேவர் சந்திப்பு. கும்பகோணத்தில் வீடு வாங்கியது. புறப்பொருள் வெண்பாமாலை பதிப்பு. |
1895 | ஜி. யூ. போப் அவர்களுடன் கடிதத் தொடர்பு |
1898 | மணிமேகலை பதிப்பு நிறைவேறியது. |
1903 | சென்னை மாநிலக் கல்லூரிக்குக் குடந்தையிலிருந்து மாற்றப் பெற்றது. |
1-1-1906 | ‘மகாமகோபாத்தியாய’
பட்டம் பெற்றது. கல்வி இலாகா ரூ. 1000 வழங்கியது. |
முன்பக்கம் | மேல் |