773

  சந்திப்பு. சீவகசிந்தாமணி பதிப்பு ஆரம்பம், ஜைன நண்பர்கள் தொடர்பு.
1883 திருக்குடந்தைப் புராணப் பதிப்பு,
1884 பரம்பரைச் சொத்தாகிய நிலத்தை ஒற்றியிலிருந்து மீட்டது. முதற்
தடவை சென்னை வருகை.
1885 மகாமகம். திருவாவடுதுறை மகாசந்நிதானம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்
ஐயரவர்கள் தந்தையாருக்கும் ஐயரவர்களுக்கும் பீதாம்பரம்
அளித்ததுடன் ஐயரவர்கள் குமாரர் கலியாணசுந்தரையருக்கும்
சந்திரஹாரம் என்னும் பொன்னாபரணம் அளித்தது.
1887 சீவகசிந்தாமணி பதிப்பித்து முடிந்து,தமிழுலகில் உலாவ ஆரம்பித்தது.
1888 திருவாவடுதுறை மகாசந்நிதானம் பரிபூரணம் எய்தியது. தியாகராச
செட்டியார் மறைவு; நெல்லை மாவட்டத்தில் ஏடுதேடத் தொடங்கியது.
1889 பத்துப்பாட்டு அச்சிட்டு நிறைவேறியது. சிலப்பதிகாரப் பதிப்பு ஆரம்பம்.
சென்னைக்கு வந்து பூண்டி அரங்கநாத முதலியார் இயற்றிய
“கச்சிக்கலம்பகம்” அரங்கேற்றத்தில் கலந்து கொண்டது.
1891 சீவகசிந்தாமணி புத்தகத்தைக் கண்டு பாரிஸ் பேராசிரியர் ஜூலியோன்
வின்ஸோன் அவர்கள் பாராட்டி எழுதியது. குமாரனுக்கு உபநயனம்.
1892 சேலம் இராமசாமி முதலியார் மறைவு. சிலப்பதிகாரம் பதிப்பித்து
முடிந்தது. பாஸ்கர சேதுபதி அவர்களின் அழைப்பின் பேரில்
இராமநாதபுரம் சென்று நவராத்திரி விழாவில் கலந்து கொண்டது.
7-10-1893 தந்தையார் மறைவு
10-12-1893 பூண்டி அரங்கநாத முதலியார் மறைவு
27-1-1893 மகாவைத்தியநாதையர் நிரியாணம்
1894 புறநானூறு பதிப்பு. பாண்டித்துரைத் தேவர் சந்திப்பு. கும்பகோணத்தில்
வீடு வாங்கியது. புறப்பொருள் வெண்பாமாலை பதிப்பு.
1895 ஜி. யூ. போப் அவர்களுடன் கடிதத் தொடர்பு
1898 மணிமேகலை பதிப்பு நிறைவேறியது.
1903 சென்னை மாநிலக் கல்லூரிக்குக் குடந்தையிலிருந்து மாற்றப் பெற்றது.
1-1-1906 ‘மகாமகோபாத்தியாய’ பட்டம் பெற்றது. கல்வி இலாகா ரூ. 1000
வழங்கியது.