|
1900 |
: |
சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900
அன்று பிறந்தார். |
1920 |
: |
சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை.
திருமணமின்றி வாழ்ந்தார். |
1922 |
: |
1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக்
காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய
திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். |
1923-27 |
: |
சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து
கட்டுரைகள் எழுதிவந்தார். |
1930 |
: |
மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். |
1931-32 |
: |
குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை
தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். |
|
|
1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச்
செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். |
|
|
1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். |
1936 |
: |
அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய
அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். |
1955 |
: |
16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். |
1961 |
: |
17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. |
1975-1979 |
: |
தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். |
1980 |
: |
8. 5. 1980-இல் மறைவுற்றார். |
2001 |
: |
நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. |