இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1161
Zoom In NormalZoom Out


கூறவே, வழக்கிற்கும் இனமில் பண்புகொள் பெயர்கள் உள என்பது
போந்ததாம்.

வரலாறு:  பெருங்கொற்றன்,  பெருங்கூத்தன்  என்பன  போல்வன,
வழக்கிடைப்   பண்புப்  பெயர்  வருங்கால்  குணமின்றி  விழுமிதாகச்
சொல்லுதற்கு வந்து நிற்கும். (18) 

19. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். 

இச் சூத்திரம்  என்னுதலிற்றோவெனின்,  உலகத்துப்  பொருளெல்லாம்
இரு  வகைப்படும், இயற்கைப் பொருளும் செயற்கைப் பொருளும் என
;  அவற்றுள்,  இயற்கைப்  பொருண்மேற்  சொல்  நிகழற்பாலவாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

உரை: உலகத்து இயல்பாகி வாராநின்ற பொருளைச் சொல்லுமிடத்து
இத்தன்மைய என்று சொல்லுக என்றவாறு.

வரலாறு: நிலம்வலிது ; நீர் தண்ணிது எனவரும். (19)

* ‘வெண்கோட்  டியானைச்  சேரனைப்  பாடியும்’ -- கல்லாடர்
உரை.
 

20. செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோவெனின்,   செயற்கைப்  பொருண்மேற்
சொல் நிகழ்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உரை:  செயற்கையினாகிய   பொருள்களை   யெல்லாம்  ஆக்கங்
கொடுத்துச் சொல்லுக என்றவாறு.

வரலாறு: மயிர் நல்ல ஆயின ; பயிர் நல்ல ஆயின என வரும்.

ஆயின என்பது ஆக்கம். (20) 

21. ஆக்கந் தானே காரண முதற்றே. 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோவெனின்,   மேலதற்கோர்  புறநடை
யுணர்த்துதல் நுதலிற்று.

உரை:     அவ்வாக்கந்தனைச்     சொல்லுமிடத்துக்    காரணம்
முன்வைத்துச் சொல்லுக என்றவாறு.

வரலாறு:  ‘கடுவும்  கைபிழி யெண்ணெயும்  பெற்றமையான்  மயிர்
நல்ல ஆயின்’ என வரும். (21) 

22.  ஆக்கக் கிளவி காரண மின்றியும்
போக்கின் றென்ப வழக்கி னுள்ளே.
 

இச்    சூத்திரம்   என்னுதலிற்றோவெனின்,   எய்தியது   விலக்குதல்
நுதலிற்று.

உரை: ஆக்கக் கிளவி காரணமின்றியுஞ் சொல்லப்படும் வழக்கினுள்
என்றவாறு.

போக்கு என்பது குற்றம்.

வரலாறு : மயிர்