மலையமான் என இருநிலைமைக்கண்ணும் அதுவே நிற்குமாறு என்பது. (15)
130. தொழிலிற் கூறு மானென் னிறுதி
யாயா கும்மே விளிவயி னான.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று.
உரை :
ஆன் என் இறுதி தொழிற்பெயராயின்
ஆயாய்
விளியேற்கும் என்றவாறு.
வரலாறு :
உண்டான் - உண்டாய் என வரும்.
இனி, ‘விளிவயினான’ என்றதனான், வாயிலான்
- வாயிலாய், பூயிலான் - பூயிலாய் என, இவ்வாறு பெயரினாகிய பெயரும் ஆயாய் விளியேற்கும் என்பாரும் உளர். (16)
131. பண்புகொள் பெயரு மதனோ ரற்றே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று.
உரை :
அவ்வான் இறுதி பண்புகொள் பெயராயின் ஆயாய் விளியேற்கும் என்றவாறு.
வரலாறு :
கரியான் - கரியாய், செய்யான்-செய்யாய் என வரும்.
பிறவும் அன்ன. (17)
132.
அளபெடைப் பெயரே யளபெடை யியல.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், னகரவீற்று அளபெடைக்குரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
கரவிறுதி அளபெடைப்பெயரும்
மேல் இகரவீற்று
அளபெடை யேற்றவாறு ஏற்க என்றவாறு.
வரலாறு :
அழாஅன், புழாஅன் என வரும். (18)
133.
முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இறந்தது காத்தல் நுதலிற்று.
உரை :
னகாரவீற்று முறைப் பெயராமே யெனின் ஏகாரம் பெற்று
விளியேற்க என்றவாறு.
வரலாறு : மகன் - மகனே, மருமகன் - மருமகனே என வரும்.
மற்று இவை இருதிணைக்கும் உரியவாம் பிறவெனின், உரிய வாயினும் முன்னர், ‘விளம்பிய நெறிய விளிக்குங் கா
|