ஐந்தாவது இயல்
பெயரியல்
152.
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.
என்பது சூத்திரம்.
இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், பெயர்ச்சொல் உணர்த்துகின்றா ராகலின், இது பெயரியல் என்னும் பெயர்த்தாயிற்று.
உரை: எல்லாச் சொல்லும் - பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும், பொருள் குறித்தனவே - பொருள் குறியாது நில்லா என்றவாறு. (1)
153.
பொருண்மை தெரிலுஞ் சொன்மை தெரிதலுஞ்
சொல்லி னாகு மென்மனார் புலவர்.
உரை: தன்னின் வேறாகிய பொருள் தெரியப்படுதலும், பொருள் அறியப்படாத சொல் தன்னையறியப்படுதலும் இரண்டு சொல்லான் ஆம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
வரலாறு:
சாத்தான் வந்தான்; பண்டு காடுமன்; உறுகால் [நற்றிணை
- 300] என்பனவற்றாற் பொருள் உணர்த்தப்பட்டவாறு.
‘நீயென் கிளவி’ [தொல். சொல். பெயரியல் - 35]
‘செய்தெ னெச்சம்’ [தொல். சொல். வினையியல் - 42]
‘தஞ்சக் கிளவி’ [தொல். சொல். இடையியல் - 18]
‘கடியென் கிளவி’ [தொல். சொல். உரியியல் - 85]
என்பவனவற்றால் பொருள் உணரப்படாது, அச் சொற்றாமே உணரப்பட்டவாறு கண்டு கொள்க. (2)
154.
தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலு
மிருபாற் றென்ப பொருண்மை நிலையே.
உரை: மேற் கூறப்பட்ட பொருண்மை தெரிதல், சொன்மாத்திரத்தால் விளங்கிநிற்றலும், சொன்மாத்திரத்தாற் றோன்றாது சொல்லொடுகூறிக் குறிப்பாற் றோன்றலும் என இரண்டு கூற்றையுடையது என்றவாறு.
வரலாறு: அவன், இவன், உவன் -- வந்தான், சென்றான் என்புழிப், பொருள்தெரிபு வேறுநின்றன.
‘ஒருவர் வந்தார்’ என்புழி, ஆண்பால் பெண்பால் என்பதூஉம், உண்ணாநின்றான் கற்கறித்து, ‘நன்கட்டாய்’ என்புழித்,
|