இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1230
Zoom In NormalZoom Out


லவை, உள்ளது    இல்லது,    உள்ளன,    இல்லன    என்னுந்
தொடக்கத்தக்கன. (16) 

168. தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெய
ரொருமையும் பன்மையும் வினையொடு வரினே. 

உரை:   கள்ளொடு  சிவணாத அஃறிணை யியற்பெயர் ஒருமையும்
பன்மையும்     விளங்குநிலையுடைய,    அதற்கேற்ற    வினையொடு
தொடர்ந்தவழி என்றவாறு. 

ஆவந்தது -  ஆவந்தன;  குதிரை வந்தது  - குதிரை வந்தன என,
ஏற்ற வினையாற் பால் விளங்கியவாறு கண்டுகொள்க. (17) 

169. இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமையிற்
றிரிபுவேறு படூஉ மெல்லாப் பெயரு
நினையுங் காலைத் தத்த மரபின்
வினையோ டல்லது பாறெரி பிலவே. 

உரை:     இருதிணைச்  சொல்லாதற்கும்  ஒத்த உரிமையவாகலின்
உயர்திணைக்கட்  சென்றுழி உயர்திணைப் பெயராயும், அஃறிணைக்கட்
சென்றுழி    அஃறிணைப்    பெயராயும்   வேறுபடு   பெயரெல்லாம்
ஆராயுங்கால்    தத்தம்    மரபின்    வினையொடு   இயைந்தல்லது
திணைவிளங்கி நில்லா என்றவாறு. 

வரலாறு: சாத்தன்  வந்தான்,  சாத்தன் வந்தது; முடவன் வந்தான்,
முடவன் வந்தது எனக் கொள்க. (18) 

170. நிகழூஉ நின்ற பால்வரை கிளவியி
னுயர்திணை யொருமை தோன்றலு முரித்தே
யன்ன மரபின் வினைவயி னான. 

உரை: நிகழ்காலம் பற்றிவரும் பால்வரை  கிளவியால்  உயர்திணை
ஒருமைப்பால் தோன்றுதலும் உரித்து, 

அவ் வொருமைப்பாற் றோன்றுதற்கேற்ற வினையிடத்து என்றவாறு. 

‘பால்வரை கிளவி’ என்பது, செய்யும் என்னும் முற்றுச் சொல்லை. 

சாத்தன் யாழ் எழூஉம், சாத்