ஆறாவது
வினையியல்
195.
வினையெனப் படுவது வேற்றமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.
என்பது சூத்திரம்.
என் நுதலிற்றோவெனின், நிறுத்த முறையானே வினைச்சொல் ஆமாறு உணர்த்திய எடுத்துக் கொண்டார், அதனால் இவ் வோத்து வினையியல் என்னும் பெயர்த்தாயிற்று.
உரை : வினையென்று சொல்லப்படுவது வேற்றுமையொடு பொருந்தாது, ஆராயிற் காலத்தொடு புலப்படும் என்றவாறு.
ஈண்டு வேற்றுமை என்பது உருபை.
வரலாறு : உண்டான், கரியன் என வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றியவாறு கண்டுகொள்க.
196. காலந் தாமே மூன்றென மொழிப.
உரை : மேல் தோற்றுவாய் செய்யப்பட்ட காலம் மூன்று என்று
சொல்லுவர் புலவர் என்றவாறு. (2)
197.
இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா
வம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே.
உரை : இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்று சொல்லப்படும் மூன்று காலமும் குறிப்புவினையொடும் பொருந்தும் மெய்ந்நிலையுடைய, வினைச்சொல்லானவை தோன்றுநெறிக்கண் என்றவாறு.
எனவே, காலம் மூன்றாவன இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பதூஉம், வெளிப்படக் காலம் விளங்காதன குறிப்பு வினையென்பதூஉம் பெற்றாம்.
வரலாறு :
உண்டான், உண்ணாநின்றான், உண்பான் என வரும்.
இறப்பாவது, தொழிலது கழிவு ; நிகழ்வாவது, தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை ; எதிர்வாவது தொழில் பிறவாமை. (3)
198.
குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் லெல்லா
முயர்திணைக் குரிமையுமஃறி
|