இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1241
Zoom In NormalZoom Out


த-ற அவ்விருவரையும்    ஒருங்கு    உளப்படுத்தலும்    தனித்து
உளப்படுத்தலும் உரிய. 

அம் - ஆம், எம் - ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வரும். 

உம்மொடு வரூஉங் க-ட-த-ற எதிர்காலம் பற்றி வரும். 

வரலாறு : 

அம் - உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம் எனவும் ; 

ஆம் -- உண்டாம், உண்ணாநின்றாம், உண்பாம் எனவும் ; 

எம் -- உண்டனெம், உண்ணாநின்றனெம், உண்குவெம் எனவும் ; 

ஏம் -- உண்டேம், உண்ணாநின்றேம், உண்பேம் எனவும் வரும். 

உம்மொடு   வரூஉங் கடதற - உண்கும், உண்டும், வருதும், சேறும்
எனவும் ; உரிஞதும், திருமுதும் என ஏற்றவழி உகரம் பெற்றும் வரும்.
இவை நான்கும் எதிர்காலம் பற்றி வரும். 

உம்மை யடைந்து வந்த க - ட - த- றக்கள், ‘உம்மொடு வரூஉங் க
-  ட  -  த  -  ற’  ஆயின.  இக்  காட்டிய எட்டு வினைச்சொல்லும்
உயர்திணைப்  பன்மை  வினைச்சொல்லை யுணர்த்துந் தன்மைச்சொல்
என்றவாறு. 

இவை     தன்னொடு   முன்னின்றானையும்   உளப்படுக்கும்,
படர்க்கையானையும்  உளப்படுக்கம்,  அவ் விருவரையும் உளப்படுக்கு
மென்பது, 

‘அவற்றுள், பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி’
                    [தொல். சொல். வினையியல் - 12]

என்னுஞ் சூத்திரத்துட் சொல்லுதும். (5) 

200. கடதற வென்னும்
அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமொ
டென்னே னல்லென வரூஉ மேழுந்
தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே. 

என்  நுதலிற்றோவெனின், மேல் உளப்பாட்டுத் தன்மை கூறினார் ;
இது,  தனித்  தன்மை  வினைச்சொல்  இவை  என்பது உணர்த்துதல்
நுதலிற்று. 

உரை : க  -  ட  -  த  -  ற  என்னும்  அந்  நான்கு  ஊர்ந்த
குற்றியலுகரம் என்றான் அவையிற்றின் ஈறு பற்றி. 

அவை வருமாறு : 

உண்கு,     உண்டு, வருது, சேறு என வரும். என், ஏன் என்பன
மூன்று     காலமும்     பற்றி    வரும்    அவை    உண்டனென்,
உண்ணாநின்றனென், உண்குவென் எனவும் ; உண்டேன், உண்