இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1261
Zoom In NormalZoom Out


தானுஞ் சொல்லப் பிழையாது, யாப்புற்றுப் புலப்படும் என்றவாறு.(46) 

241. செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,இதுவும் ஒரு வகை வழூஉச்சொல் அமைந்தமை நுதலிற்று. 

உரை : வினைக்கட் செய்கையீறாச் செய்யப்பட்ட பொருளைத் தான்
செய்கை   செய்ததுபோல   அதற்குத்   தொழிற்   கூறலும்   உண்டு,
வழக்கடிப்பட்ட மரபிலக்கணம் என்றவாறு. 

வரலாறு :  இல்லம் மெழுகிற்று, சோறு அட்டது என வரும். (47)  

242. இறப்பே யெதிர்வே யாயிரு காலமுஞ்
சிறப்பத் தோன்று மயங்குமொழிக் கிளவி. 

இச்சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  இதுவும் கால வழுக் காத்தல்
நுதலிற்று. 

உரை ; இறந்த காலமும் எதிர்காலமும் தம்முள் மயங்கி வரப்பெறும்
என்றவாறு. 

வரலாறு :  யாம்  பண்டு  விளையாடுவது இக்கா ; பண்டு என்பது
இறந்த காலம், விளையா