இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1266
Zoom In NormalZoom Out


பது. 

ஒழியிசை     :  கொளலோ  கொண்டான்  என்பது,  கோடற்குத்
தகுமாயினுங்   கொண்டுய்யப்   போயினானல்லன்   என   ஒழிவுபட
வந்தமையின் ஒழியிசை யாயிற்று. 

தெரிநிலை:‘நன்றோ? அன்று; தீதோ? அன்று. இடைநிகர்த்தாயிற்று’
என்பது. 

சிறப்பு:  ‘ஒஓ பெரியன்’

என்பது. 

252. தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே
யீற்றசை யிவ்வைந் தேகா ரம்மே. 

வரலாறு:

தேற்றம் : ‘அவனே கொண்டான்’ என்பது. 

வினா   : ‘நீயே கொண்டாய்?’ என, வினாவிச் சொல்வது. 

     பிரிநிலை: ‘அவனே கொண்டான்’ என்பது; பலருள்  ஒருவனைப்
பிரித்துச் சொல்வது. 

எண்   : ‘நிலனே, நீரே, தீயே, வளியே, ஆகாயமே’ என வரும். 

ஈற்றசை : ‘கடல்போற்  றோன்றல  காடிறந் தோரே’[அகம் - 1.]

என வரும் ஈற்றின்கண் என்றவாறு. (9) 

253. வினையே குறிப்பே யிசையே பண்பே
யெண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங்
கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி. 

வரலாறு: 

வினை: ‘கொள்ளெனக் கொண்டான்’ என்பது.

குறிப்பு: ‘விண்ணென விசைத்தது’ என்பது;        ‘துண்ணெனத் துடித்தது’ என்பதும் அது.

இசை:  ‘ஒல்லென ஒலித்தது’ என்பது.

பண்பு: ‘வெள்ளென விளர்த்தது’ என்பது.

எண்:  ‘நிலனென வளியென’ என வரும்.

பெயர்: ‘ஊரெனப்படுவது உறையூர்’ என வரும்;       ‘நாடெனப்படுவதுசோணாடு’ என்பதும் அது. 

254. என்றென் கிளவியு மதனோ ரற்றே. 

வரலாறு:  

வினை: ‘கொள்ளென்று கொண்டான்’ என்பது.

குறிப்பு: ‘விண்ணென்று விசைத்தது’ என்பது;
       ‘துண்ணென்று துடித்தது’ என்பதும் அது.

இசை:  ‘ஒல்லென்று ஒலிக்கும்’ [ஐந்திணையைம் - 28]        என்பது. 

பண்பு: ‘வெள்ளென்று விளர்த்தது’ என்பது.

எண்:  ‘நிலனென்று வளியென்று’ என வரும்.

பெயர்: ‘ஊரென்று சொல்லப்படுவது உறை