இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1282
Zoom In NormalZoom Out


ளையாட்டுள் தோன்றியபொருள் என்பதாம்.

314. தடவுங் கயவும் நளியும் பெருமை.

வரலாறு:

‘தடத்தோள்’

‘கயவெள் ளருவி’ (அகம்-38)

‘நளிமலை நாடன்’ (புறம்-150)

என வரும். (23)

315. அவற்றுள்
தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்.

உரை:தட என்பது பெருமையை யன்றிக் கோட்டப் பொருளினையும்
விளைக்கும் என்றவாறு.

வரலாறு: 

‘தடமருப் பெருமை’ (நற்றிணை - 120)

எனவரும். (24)

316. கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்.

வரலாறு :

‘கயந்தலை மடப்பிடி’ (நற்றிணை - 137)

என வரும். (25)

317. நளியென் கிளவி செறிவு மாகும்.

உரை  :  நளி    என்னும்    சொல்    பெருமையே    யன்றிச்
செறிவுப்பொருளும் படும் என்றவாறு.

வரலாறு :

‘நளியிருள்’

என்றக்கால், செறியிருள் என்பதாம்.

மூன்றிடத்து உம்மையும் இறந்தது தழீஇயின. (26)

318. பழுது பயமின்றே.

வரலாறு :

‘பழுதே வந்தார்’

என்றக்கால், பயமின்றியே வந்தார் என்பதாம். (27)

319. சாயன் மென்மை.

வரலாறு:

‘சார னாடன் சாயன் மார்பு’ (பதிற்றுப்-16)

சான்றக்கால், மெல்லிய மார்பு என்பதாம். (28)

320. முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே.

வரலாறு :

‘முழுக்கறை பெய்தான்’

என்றக்கால், எஞ்சாமை பெய்தான் என்பதாம். (26)

321. வம்பு நிலையின்மை.

வரலாறு :

‘வம்ப வடுகர்’ (அகம்-375)

‘வம்ப நாரை’ (அகம்-190)

என்றக்கால், நிலையில்லாமை கூறியவாறாம். (30)

322. மாதர் காதல்.

வரலாறு :

‘மாதர் வண்டொடு சுரும்பிசைத்தது’

என்றக்கால், காதல் வண்டு என்பதாம். (31)