323.
நம்பு மேவு நசையா கும்மே.
வரலாறு :
‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம்-198)
என்றக்கால், நச்சி என்பதாம்.
‘பேரிசை நவிர மேஎ யுறையும்’ (மலைபடு-82)
என்றக்கால், நயந்து உறையும் என்பதாம். (32)
324.
ஓய்த லாய்த னிழத்தல் சாஅ
யாவயி னான்கு முள்ளத னுணுக்கம்.
வரலாறு:
‘ஒய்கலை யொருத்தல்’
என்றக்கால், நுணுகிய கலை யொருத்தல் என்பதாம்.
‘கையு மெய்யு மாய்ந் திருந்தார்’
என்றக்கால், சுருங்கி யிருந்தார் என்பதாம்.
‘நிழத்த யானை மேய்புலம் படர’ (மதுரைக்காஞ்சி - 303)
என்றக்கால், மெலிந்து நுணுகிய என்பதாம்.
‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல் - 18)
என்றக்கால், சுருங்கி என்பதாம். (33)
325.
புலம்பே தனிமை.
வரலாறு:
‘புலம்புவிட் டிருந்தார்’ (மலைபடு - 49)
என்றக்கால், தனிமை துறந்திருந்தார் என்பதாம். (34)
326.
துவன்று நிறைவாகும்.
வரலாறு:
‘ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்’ (பதிற்றுப் - 11)
என்றக்கால், நிறைந்த மூதூர் என்பதாம். (35)
327.
முரஞ்சன் முதிர்வே.
வரலாறு:
‘கோடுபல முரஞ்சிய கோளி யாலம்’ (மலைபடு - 268)
என்றக்கால், முதிர்ந்த ஆலம் என்பதாம். (36)
328.
வெம்மை வேண்டல்.
வரலாறு :
‘நீ வெம்மையள்’
என்றக்கால், நீ வேண்டப்படுவாள் என்பதாம். (37)
329.
பொற்பே பொலிவு.
வரலாறு :
‘அணிகலம் பொற்ப’
என்றக்கால், பொலிய என்பதாம். (38)
330.
வறிது சிறிதாகும்.
வரலாறு :
‘வறிது நெறியொரீஇ’
என்றக்கால், சிறிது நெறி ஒரீஇ என்பதாம். (39)
331.
ஏற்ற நினைவுந் துணிவு மாகும்.
வரலாறு :
‘ஏற்றத் திருந்தார்’
என்றக்கால், நினைத்
|