திருந்தார் என்பதூஉம், துணிந்திருந்தார் என்பதூஉம் ஆம். (40)
332. பிணையும் பேணும் பெட்பின் பொருள.
உரை :
பெட்டல் என்பது புறந்தருதல்.
வரலாறு :
‘அரும்பிணை பயக்கற்ற வேட்ட ஞான்று’
என்றக்கால், அரும்புறந்தரு வரவிற்றாகி வேட்டபோழ்து என்பதாம்.
‘பேணினே னல்லனோ மகிழ்ந’ (அகம் - 16)
என்றக்கால், பெட்டேனல்லனோ மகிழ்ந என்பதாம். (41)
333. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை யெல்லாங் குறிப்புச்சொல்.
வரலாறு :
‘பணைத்துப்போய் வீழ்ந்தது’
என்றக்கால், பிழைத்துப் போய் வீழ்ந்தது என்பதாம்.
‘பணைத்தோள்’ (அகம் - 1)
என்றக்கால், பெருந்தோள் என்பதாம். (42)
334. படரே யுள்ளல் செலவு மாகும்.
வரலாறு :
‘படர்மலி வெற்பர்’
என்றக்கால், உள்ளல்மலி வெற்பர் என்பதாம்.
‘ஆறு படர்ந்தார்’
என்றக்கால், சென்றார் என்பதாம். (43)
335. பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள.
வரலாறு :
‘பையுணல்யாழ்
என்றக்கால், நோய் செய்யும் நல்யாழ் என்பதாம்.
‘சிறுமை யுறுப செய்பறியலர்’ (நற்றிணை - 1)
என்றக்கால், நோயுறுப செய்யார் என்பதாம். (44)
336. எய்யாமை யறியாமை.
வரலாறு :
‘எய்யாமையலை’ (குறிஞ்சிப்-8)
என்றக்கால், அறியாமையலை என்றவாறாம். (45)
337. நன்று பெரிதாகும்.
338. தெவுக்கொளற் பொருட்டே.
இரண்டு சூத்திரமும் உரை நோக்கி ஒன்றா யெழுதப்பட்டது.
வரலாறு :
‘நன்றுமரிது துற்றனையாற் பெரும’ (அகம்-10)
என்றக்கால், பெரிது துற்றனையால் என்பதாம்.
‘நீர்தெவு நிரைத்தொழுவர்’ (மதுரைக்காஞ்சி - 89)
என்றக்கால், நீர்கொள்ளும் நிரைத்தொழுவர் என்பதாம். ()
339. தாவே வலியும் வருத்தமு மாகும்.
வரலாறு :
‘கருங்கட் டாக்கலை’ (குறுந் - 69)
என்றவழி,
|