இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1285
Zoom In NormalZoom Out


வருந்திய கலை என்பதாம்.

‘தாவி னன்பொன்’

என்றக்கால்,    வலியி    னன்பொன்    என்பதாம்;   பொன்னுக்குப்
போக்குடைமை வலியது. (48) 

340. தெவ்வுப் பகையாகும். 

வரலாறு :

‘தெவ்வர் தேயத்து’

என்றக்கால், பகைவர் தேயத்து என்பதாம். (49) 

341. விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை யெல்லாங் குறிப்பு.

வரலாறு: 

‘விறந்த காப்பொடு’

என்றக்கால், செறிந்த காப்பொடு என்பதாம்.

‘உறந்த விஞ்சி யுயர்நிலை மாடம்’

என்புழி, செறிந்த இஞ்சி என்பதாம்.

‘வெறுத்தார்’ (புறம்-53)

என்றக்கால், செறிந்தார் என்பதாம். (50) 

342. அவற்றுள்
விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும்.

வரலாறு :

‘கோடுமுற்றி யளந்த காரொடு விறந்தே’

என்றக்கால், வெரீஇ என்பதாம். (51) 

343. கம்பலை சும்மை கலியே யழுங்க
லென்றிவை நான்கு மரவப் பொருள.
 

இவை இசைபற்றி வந்தன.

வரலாறு :

‘ஊர் கம்பலை யுடைத்து’

என்றக்கால், அரவமுடைத்து என்பதாம்;

‘ஊர் சும்மை யுடைத்து’

என்பதும் அது;

‘கலிகெழு மூதூர்’ (அகம் - 11)

‘அழுங்கன் மூதூர்’

என்பனவும் ஒக்கும். (52) 

344. அவற்றுள்
அழுங்க லிரக்கமுங் கேடு மாகும்.
 

வரலாறு :

‘மகனையிழந் தழுங்கினார்’

என்றக்கால், இரங்கினார் என்பதாம்.

‘செலவழுங்கினார்’

என்றக்கால், செலவு கெடுத்தார் என்பதாம்.

இவை குறிப்புப்பற்றி வந்தன. (53) 

345. கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும்.
 

வரலாறு :

‘கழுமியஞாட்பு’ (களவழி - 11)

என்றக்கால், மயங்கிய ஞாட்பு என்பதாம். (54) 

346. செழுமை வளனுங் கொழுப்பு மாகும். 

வரலாறு:

‘செழுஞ் செந்நெல்’

என்றக்கா