இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1287
Zoom In NormalZoom Out


உம்மை இறந்தது தழீஇயிற்று. 

‘உடையதிழந் துயிரிரங்கி யிருந்தார்’

என்றக்கால், கழிவினை விளக்கும், ஈண்டு இரக்கம். (62)  

354. இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை. 

வரலாறு : 

‘இலம்படு புலவர்’ (மலைபடு - 576)

என்றக்கால், வறுமைப்படும் புலவர் என்பதாம். 

‘ஊரை யொற்கந் தீர்க்கும்’

என்றக்கால், வறுமை தீர்க்கும் என்பதாம். (63)  

355. ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள. 

  வரலாறு: 

‘தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரிய’ (நற்றிணை-143)

என்றக்கால், பரப்பிய என்பதாம். 

‘புண்ணுமிழ் குருதிப் புனல் பாய்ந்து’

என்றக்கால், பரந்து என்பதாம். (54)  

356. கவர்வுவிருப் பாகும். 

  வரலாறு: 

‘கொள்ளை மாந்தரி னானாது கவரும்’ (அகம்-3)

என்றக்கால், விரும்பும் என்பதாம். (65)  

357. சேரே திரட்சி. 

வரலாறு:  

‘சேர்ந்துசெறி குறங்கு’

என்றக்கால், திரண்டு செறி குறங்கு என்பதாம். (66)  

358. வியலென் கிளவி யகலப் பொருட்டே. 

வரலாறு:

  ‘வியலிரு வானம்’

என்றக்கால், அகலிரு வானம் என்பதாம். (67)

359. பேநா முருமென வரூஉங் கிளவி
யாமுறை மூன்று மச்சப் பொருள.

வரலாறு: 

‘மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்’ (குறுந்-87)

என்பது, அச்சமுதிர் கடவுள் என்பதாம்.

  ‘நாம்வருந் துறைசேர்ந்து’

என்பது, அச்சமுடைய துறை போந்து என்பதாம்.

  ‘உருமில் சுற்றம்’

என்பது, அச்சமில் சுற்றம் என்பதாம்.

  இசை யெல்லாங் குறிப்பு. (68)

360. வயவலி யாகும். 

வரலாறு:

  ‘வாள்வரி வேங்கை வயப்புலி’

என்பது, வலியுள்ள புலி என்பதாம். (69)

361. வாளொளி யாகும். 

வரலாறு:

  ‘கண்ணே,
நோக்கி நோக்கி வாளிழந் தனவே’ (குறுந்-44)

என்பது, ஒளி யிழந்தன என்பதாம். (70)

362. துயவென் கிளவி யறிவின் றிரிவே. 

வரலாறு:

  ‘அறிவு து