இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1327
Zoom In NormalZoom Out


ழான்  என்பன  ;  அக்காலத்து அவை யுண்மையான் ஆசிரியன் ஓதி
முடிபு கூறப்பட்டன. 

இனிச்,  சுட்டுச்சினை  நீடிய  ஐகாரவீற்றப் பெயர் (தொல். எழுத்து.
தொகைமரபு  - 17) உறழ்ந்து முடிக என்றான் ஆசிரியன், அக் காலத்து
அவை  யுண்மையான்  ;  இப்பொழுது  அவற்றிற்கு  உதாரணமில்லை.
பிறவும் அன்ன. 

இனி,  ஆசிரியனால்  ஆகா  என ஓதப்பட்டன தோன்றுவ உள ;
அவை,  ஞண்டு என்றும், நீர்கண்டக என்றும், சம்பு, சள்ளை என்றும்
வரும். (56) 

447. குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்
குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல.
 

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,  செய்யுட்கு  ஆவதோர்
முடிபு கூறுதல் நுதலிற்று. 

உரை  :  முன்  செய்யுளீட்டம்  தன்மையானே கடியப்படுமென்றே
யறியக்கிடந்தது  ;  இனி,  அவற்றை  முழுவதூஉங்  கிடை  கடாவாது
குறைத்துக்    கடாவப்படுதலும்    உடைய   ஒரோவழி,   அங்ஙனங்
குறைக்கப்பட்டதேனுங்  குறையாது  நின்றவிடத் தியலுமாறே புலப்பட்டு
இயலுஞ் செவிக்கு என்றவாறு. 

இனி,    அவை     குறைக்குமிடத்துத்,     தலைக்குறைத்தலும்
இடைக்குறைத்தலும்   கடைக்குறைத்தலும்   என   மூன்று  வகையாற்
குறைக்கப்படும் என்பது. 

அவற்றுள் தலைக்குறைத்தது : 

‘மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி’ 

என்பது  ;   ஆண்டுத்    தாமரை   எனற்பாலார்   மரை   என்று
தலைக்குறைத்தார் என்பது. 

இடைக் குறைத்தல் என்பது : 

‘வெரிநி னோதி வெருக்கண் டன்ன’ 

என்பது    ;    ஆண்டு,    ஓந்தி    எனற்பாலார்    ஓதி    என்று
இடைக்குறைத்தார் என்பது. 

இனிக் கடைக்குறைத்தல் என்பது : 

‘நீலுண் டுகிலிகை கடுப்ப’ 

என்பது  ;  நீலமுண்  டுகிலிகை எனற்பாலார், நீலுண்டுகிலிகை என்றார்
என்பது. 

‘குறைக்கும்வழி  யறிதல்’     என்பது,    குறைக்கைக்குத்    தகக்
குறைக்கப்படுவது என்றற்கு என்பது. 

‘நிறைப்பெயரியல’ எனவே, இவ்விகாரம்