இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1332
Zoom In NormalZoom Out


ற்றோடிதனிடை வேற்றுமை தெரிந்துகொள்க. (63) 

454. ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக் காகு மிடனுமா ருண்டே.
 

இச்சூத்திரம்    என்னுதலிற்றோ    வெனின்,    இதுவும்    பால்வழு
அமைக்கின்றது. 

உரை : ஒருமை சுட்டி  நின்ற  பெயர்ச் சொல்லும் பன்மைகொண்டு
முடியும் இடனும் உடைத்து என்றவாறு. 

வரலாறு : 

‘அங்கலுழ் மாமெ யகுதை தந்தை
யண்ணல் யானை யடுபோர்ச் சோழர்’
 

என வரும். 

இதனுள்,  ‘தந்தை’  எனநின்ற  ஒருமை  முறைப்பெயர்,  ‘சோழர்’
என்னும்    பன்மைகொண்டு   முடிந்தமையின்,   வழூஉவேயெனினும்
அமையும் என்பது ; 

‘யானெம் மூர்புகுவல்’ 

என்பதும் அது. (64) 

455. முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே
யாற்றுப்படை மருங்கிற் ‘போற்றல் வேண்டும்.’
 

இச்சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  இது  செய்யுட்கு உரியதோர்
முடிபு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :  முன்னிலை  சுட்டிய  வொருமைச் சொல் பன்மைகொண்டு
முடியினும்  வரைந்து  மாற்றப்படாது  ஆற்றுப்படைச்  செய்யுளிடத்து,
அதனை ஆண்டுப் போற்றியுணர்க என்றவாறு. 

‘கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ’
                           (மலைபடுகடாம் - 50)

என்புழித், ‘தலைவ’ என்பது ஒருமைப் பெயர் ; அது, பின்னை, 

‘ஒருவி ரொருவி ரோம்பினிர் கழிமின்’ (மலைபடுகடாம்-218) 

எனப்  பன்மைகொண்டு  முடிந்தது.  முடிந்ததே  யெனினும்  அமைக
என்பது    ;   மற்று   இதுவும்   ஒருமைப்பெயர்   பன்மைகொண்டு
முடிதலொக்குமாகலின், முன்னர்,

‘ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி’
                          (தொல். சொல். எச்ச-64)

என்னுஞ்  சூத்திரத்துள்  அடங்கும்   பிறவெனின்,  அற்றன்று,  முன்
செய்யுணோக்கிச்  சொல்லினார்  அல்லர்  ; இனிச் செய்யுள் நோக்கிச்
சொல்லினார்.   எங்ஙனம்?   முன்னிலையொருமை   பன்மைகொண்டு
முடிதல்    ஆற்றுப்படைச்    செய்யுட்கு    முன்னிலைக்   கட்டுரை
பயின்றமையினும் மேலதனைக்கொண்டும் அச்செ