|
றவற்றின் பெயரும் முறையும் கூறுகின்றது.
(இ-ள்.)
முறைப்பெயர் நிலையே - முறைப்பெயரது நிலைமையை, பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று ஆயிரண்டு என்ப - பெண்மை முறைப்பெயரும் ஆண்மை முறைப்பெயரும் என்று கூறப்பட்ட அவ்விரண்டும் என்று கூறுவர் ஆசிரியர், எ-று. (25)
பெண்மை சுட்டிய விரவுப்பெயர்
182.
பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே.
இது, பெண்மைப் பெயரெல்லாந் தொகுத்து இரு திணைக்கும்
உரிமை கூறுகின்றது.
(இ-ள்.) பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் - பெண்மை இயற்பெயரும் பெண்மைச் சினைப்பெயரும் பெண்மைச் சினைமுதற் பெயரும் பெண்மை முறைப்பெயரும், ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே - அஃறிணைப்பெண் ஒன்றற்கும் உயர்திணை ஒருத்திக்கும் பொருந்திய நிலைமையை உடையனவாம், எ-று.
(எ-டு.)
சாத்தி வந்து; சாத்தி வந்தாள். முடத்தி வந்தது; முடத்தி வந்தாள் முடக்கொற்றி வந்தது; முடக்கொற்றி வந்தாள்.
தாய் வந்தது; தாய் வந்தாள்.
என வரும். முடம், சினையாகிய காலை உணர்த்திற்று.
‘ஆய்’ என்பதும் அது. ‘யாய்’ (குறுந் .40 அகம். 12:1) என்பது தன்மையோடு ஒட்டுதலின் முறைப்பெயரெனினும், உயர்திணையாம். (26)
ஆண்மை சுட்டிய விரவுப்பெயர்
183.
ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலயே.
இஃது, ஆண்மைப்பெயர், எல்லாந் தொகுத்து இரு திணைக்கும்
உரிமை கூறுகின்றது.
(இ-ள்.) ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்- ஆண்மை இயற்பெயரும் ஆண்மைச் சினைப்பெயரும் ஆண்மைச் சினைமுதற் பெயரும் ஆண்மை முறைப்பெயரும், ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே - அஃறிணை ஆண் ஒன்றற்கும் உயர்திணை ஒருவற்கும் பொருந்திய நிலைமையை உடையனவாம், எ-று.
(எ-டு.) சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான்; முடவ
|