நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   633
Zoom In NormalZoom Out


(எ-டு.) ஒருவர் வந்தார் என வரும். (37) 

ஒருவர் என்பது பன்மைவினை கொள்ளல் 

194. தன்மை சுட்டின் பன்மைக் கேற்கும் 

(இ-ள்.) முடியுந் தன்மையைக் கருதின், பன்மைக்கு ஏற்கும் -  தான்
சுட்டுகின்ற பொருண்மைக்கு  ஏற்ப   ஒருமைச்சொல்லொடு  முடியாது,
ரகர ஈற்றதாய்  நின்ற சொற்றன்மைக்கு ஏற்பப் பன்மைச்சொல் பெற்று
முடியும், எ-று. 

(எ-டு.) ஒருவர் வந்தார், ஒருவர்  அவர்.  இது  பால்  பற்றிய மரபு
வழுவமைதி. (38) 

நீயிர், நீ, ஒருவர் : பால் தெரியுமாறு 

195. இன்ன பெயரே இவையெனல் வேண்டின்
முன்னஞ் சேர்த்தி முறையின் உணர்தல்.
 

(இ-ள்.) என்பன   இன்ன பாற்பெயர் என்று அறியலுறின்,  முன்னம்
சேர்த்தி முறையின் உணர்தல்-இடமுங் காலமும் பற்றிச்   சொல்லுவான்
குறிப்பொடு கூட்டி மேல்   ஓதின   முறையானே   திணையும்  பாலும்
உணர்க, எ-று. 

(எ-டு.) விலங்கு வாராததோர் இடத்திருந்து நீயிர்வந்தீர், நீ வந்தாய்,
என்றால்   உயர்திணை எனவும், மக்கள் வாராததோர்   இடத்திருந்து
அங்ஙனங்  கூறினால் அஃறிணை    எனவும்   உணரப்படும்.  ‘நீயும்
தவறிலை நின்னைப் புறங்கடை,’ (கலி. 56:20)  என்றவழிப்   பெண்பால்
என்பதூஉம், ‘நீயே பிறர்நாடு  கொள்ளுங்   காலை,’   (புறம்.  57:  5)
என்றவழி     ஆண்பால் என்பதூஉம்,   ‘இன்துணைப்    பிரிந்தாரை
உடைமையோ நீ,’ (கலி. 129:15)

சார்ந்தொழுகல்       ஆற்றின்,’    (நாலடி. 309)     என்றவழிச்
சொல்லுவானொடு கேட்