|
பெண்மகன் : வினை கொளல்
196.
மகடூஉ மருங்கின் பால்திரி கிளவி
மகடூஉ இயற்கை தொழில்வயி னான.
பொருண்மைக்கண் பால் திரிந்து வரும் பெண்மகன் என்னும் பெயர்,
தொழில்வயினான மகடூஉ இயற்கை - தொழில் கொள்ளுமிடத்து
மகடூஉவிற்கு உரிய தொழில் கொள்ளும், எ-று.
(எ-டு.) பெண்மகன் வந்தாள் என வரும்.
பொருள்பற்றி முடிபு
கூறிற்று. (40)
பெயரின் ஆகார ஈற்றயல் செய்யுளில் ஓகாரமாதல்
197.
ஆஓ ஆகும் பெயருமா ருளவே;
ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே.
(இ-ள்.)
திரியும் பெயரும் உள; ஆயிடன் அறிதல்
செய்யுளுள்ளே-
அத் திரியும் இடம் அறிக செய்யுளுள், எ-று.
(எ-டு.) ‘வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும்
சிலம்பே நல்லோர், யார்கொல்! அளியர்
தாமே!’ (குறுந். 7) ‘கழனி
நல்லூர் மகிழ்நர்க் கென், இழைநெகிழ்
பருவரல் செப்பா தோயே!’
(நற்.70) என வரும்.
அளபெடுத்தால் ஆ ஓ வாகா. (41)
விரவுப்பெயர் செய்யுளுள் வரும் முறைமை
198.
இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா
நிலத்துவழி மருங்கின் தோன்ற லான.
பெயர்க் கிளவி -
செய்யுளுள் கருப்பொருள் கூறும்வழிக்
கிளக்கப்படும் இரு திணைக்கும் உரிய பெயர், நிலத்துவழி
மருங்கின்
தோன்றலான - நால்வகை ஒழுக்கங்களின் இடமாகிய
இடத்தே
அவற்றிற்கு உறுப்பாய்த் தோன்றலின், உயர்திணை
சுட்டா -
உயர்திணையை உணர்த்தாது அஃறிணையை உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு, வதுவை
|