|
(இ-ள்.)
பாடுமாகிய அவைதாம் (ஆகுமாறு இனிச்சொல்லுவல்), அம் ஆம் எம் ஏம் என்னும் ஈற்றவாகிய சொல்லும் ,உம்மொடு வரூஉம் க ட த ற என்னும் அந்நாற் கிளவியொடு - உம் என்னும் இறுதி இடைச்
சொல்லின் உகரம் க,ட,த,ற என்னும் ஒற்றின்மேல் ஏறிய கும்மும்
டும்மும் தும்மும் றும்மும் என்னும் ஈற்றவாகிய அந்நான்கு சொல்லும்,
ஆயெண் கிளவியும் - ஆகிய அவ்வெட்டுச் சொல்லும் பன்மை
உரைக்கும் தன்மைச் சொல்லே - சொல்லுவான் தன்னொடு பிறரையுங்
கூட்டிப் பன்மையினைச் சொல்லுந் தன்மைக்கு உரிய சொல்லாம், எ-று.
|
|
என்பன தன்னோடு முன்னின்றாரையுந் தமராயவழிப் படர்க்கையாரையும் உளப்படுத்தி, கடதற என்னுங் கால எழுத்தின்முன் அம் ‘அன்’ பெற்றும், ஆம் ‘அன்’ பெறாதும் வரும். ‘எம், ஏம்’ என்பன, படர்க்கையாரை உளப்படுத்தி, அக்கால எழுத்தின்முன்னர் எம் ‘அன்’ பெற்றும் ஏம் ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்.
|