|
|
|
னம், தெருட்டினம், அருத்தினம், அரற்றினம் என்பன, ககர ஈறும்
டகர ஈறும் தகர ஈறும் றகர ஈறும் முதல்நிலைச் சொல்லாய் நின்று
‘இன்’ பெற்றன.
|
|
இனி, இவை நிகழ்காலம் பற்றி வருங்கால் ‘நில், நின்று’
என்பவற்றொடு வந்து, முற்கூறியவாறே நிற்கும். ‘நில்’ என்பது லகரம்
னகரமாய்த் தனக்கேற்ற றகரம் பெற்று நிற்கும்.
|
|
இனி, ‘நின், கின்’ என நிற்கும் என்றுமாம்.
|
|
(எ-டு.) உண்ணாநின்றனம், உண்கின்றனம்; உண்ணாநின்றிலம், உண்கின்றிலம் எனவும், உண்ணாநின்றாம், உண்கின்றாம்; உண்ணாநின்றிலாம், உண்கின்றிலாம் எனவும், உண்ணாநின்றனெம், உண்கின்றனெம்; உண்ணா நின்றிலெம், உண்கின்றிலெம் எனவும், உண்ணாநின்றனேம், உண்கின்றனேம் உண்ணாநின்றேம், உண்கின்றேம்; உண்ணாநின்றிலேம், உண்கின்றிலேம் எனவும் வரும்.
|
|
உண்ணடாகிடந்தாம், உண்ணாவிருந்தாம் எனக் ‘கிட, இரு’
என்பனவும் நிகழ்காலத்து வரும்.
|
|
உண்கிறேமெனக் ‘கிறு’ என்பது நிகழ்காலம் உணர்த்துதல் இக்கால
வழக்கு.
|
|
இனி, இவை எதிர்காலம் பற்றி வருங்கால் பகரமும் வகரமும்பெற்று வரும். வகரம் ஏற்புழிக் குகரமும் உகரமும் அடுத்தும் நிற்கும்.
|
|
(எ-டு.) உண்பம், உண்குவம், உரிஞுவம், திருமுவம், உண்ணலம்
எனவும்; ‘உண்பாம், உண்குவாம், உண்ணாம் எனவும்; உண்பெம் உண்குவெம், உண்ணலெம் எனவும்; உண்பேம், உண்குவேம், உண்ணேம் எனவும் வரும்.
|
|
இனி, ‘அம்’ ஈறு வருங்கால், அண்க ணாளனை நகுகம் யாமே.’ (அகம். 32:21) எனவும், ‘பாடுகம் வம்மின் போதுகம்.’ (கலி.104:63) எனவும், ‘பாடுகம் வாவாழி தோழி,’ (கலி. 41:1) எனவும் ககரம் எதிர்காலமும் உணர்த்தி வரும். கூறுவன், சொல்லுவன், போதுவன் என வரும் வகரமும் எதிர்காலம் உணர்த்தும்.
|
 |