|
இனித் தெரிநிலையுடன் கூடிய டகர உகரம் பூணை உடைத்து, என்னும் பொருண்மைக்கண் பூட்டு எனவும்; இடத்தது என்னும் பொருண்மைக்கண், ‘வகைதெரிவான் கட்டே உலகு’ (குறள்.27) எனவும்; எந்நாளது என்னும் பொருண்மைக்கண், எந்நாட் டாகுநும் போரே? எனவும்; விளைவினை உடைத்து; என்னும் பொருண்மைக்கண், ‘வேலி, ஆயிரம் விளையுட்டாக!’ (பொருந. 246-47) எனவும்; குழிவினையுடைய கண்ணை உடைத்து, என்னும் பொருண்மைக்கண், குண்டு கட்டு எனவும்; பொருள், இடம், காலம், தொழில், உறுப்பு என்னும் ஐவகைப்பெயரும் அடியாக வரும். ஓட வற்று, ஓட வல்ல; ஓட வல்லாது, ஓட வல்லா என்பனவுங் கொள்க. (24)
|