நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   673
Zoom In NormalZoom Out


 

என்பது    உணர்த்துதற்கு    முன்னிலையை   முற்கூறினார்.    இனி,
எழுத்தோத்தினுள்,  ‘ஏவல்  கண்ணிய வியங்கோட்கிளவியும் (210) என
அகர  ஈற்றுள்  எடுத்து  ஓதினமையாற் பொருந்திய மெய்யை ஊர்ந்து
அகர   ஈறாய்   வருதலும்;   உடம்பொடு  புணர்த்தல்  என்பதனான்,
‘வழாஅல்  ஓம்பல்’  (13)  எனவும், ‘இற்றெனக் கிளத்தல்’ (19) எனவும்,
‘ஆக்க  மொடு  கூறல்’  (20)  எனவும்  வந்த  அல்  ஈறும்,  ‘மரீஇய
தொராஅல்’  (443)  என  வரும்  ஆல் ஈறுமாய் வருதலும், ஒன்றென
முடித்தல்  என்பதனான்  வாழியர்  என்னும்  அர் ஈறும்,  மறைக்கண்,
‘காணன்மார்   எமர்’   (நற்.64)   என்னும்  மார்   ஈறும்,  ‘வாழ்த்தல்
வேண்டுமிவண்  வரைந்த வைகல்’ (புறம். 367:6 ) என்னும்  உம் ஈறும்,
‘அஞ்சாமை  அஞ்சுவ  தொன்றின்’ என்னும் ஐகார ஈறுமாய் வருதலுங்
கொள்க.
 

என உடம்பாடும் மறையுமாய் வருதலுங் கொள்க.
 

187:1) என்பனவற்றையும் நாடேயாக, காடேயாக என இதன்பாற்படுத்துக.
இவற்றுள் ஏவல் கண்ணாதது இதுவெ உணர்க. (29)
 

செய்யும் என்னும் முற்றுப் பொருந்தாத இடம்
 

229.

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச்
செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா.
 


 

(இ-ள்.) மூன்றும்  -  பல்லோரது படர்க்கையும் முன்னிலையும் தன்மையுமாகிய
அவ்  வெஞ்சிய  கிளவிக்கண்  வரும்  மூன்றும்,  நிகழும்  காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா - நிகழுங் காலத்து வரு