நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   679
Zoom In NormalZoom Out


இது  பெயரெச்சக்   குறிப்பு;   உழுது   பயன்கொண்டு  -  இது
வினையெச்சம்;  உழுது அன்றி உண்ணான்-இது வினையெச்சக் குறிப்பு.
(31) 

இதுவும் அது

231. பின்முன் கால்கடை வழியிடத் தென்னும்
அன்ன மரபிற் காலங் கண்ணிய
என்ன கிளவியும் அவற்றியல் பினவே. 

இதுவும் ஒருசார் வினையெச்சம் உணர்த்துகின்றது. 

(இ-ள்.)  பின் முன் கால் கடை வழி இடத்து என்னும் கிளவியும் -
பின்னும்  முன்னும்  காலும்  கடையும்  வழியும்  இடத்தும்   என்னும்
ஈற்றவாகிய  சொற்களும்,  அன்ன  மரபிற்  காலம்  கண்ணிய  என்ன
கிளவியும்  -  அம்  முறைமைபோலக்  காலத்தைக்  குறித்த  எல்லாச்
சொற்களும்,    அவற்று    இயல்பின-முற்கூறிய   ஒன்பதும்   போல
வினையெச்சத்திற்கு வாய்பாடாம் இயல்பை யுடைய, எ-று. 

(எ-டு.)   பின்:  நீயிர்  பொய்  கூறியபின்  மெய்கூறுவார்  யார்?
‘இளமையும் தருவதோ இறந்த பின்னே?’ (கலி. 15:26) என இறப்பும், நீ
இவ்வாறு  கூறு  கின்றபின்  உரைப்பது உண்டோ? என நிகழ்வும்பற்றி
வரும்.  முன்:  ‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை’ (குறள். 435) என
இறப்புப்பற்றி  வரும்.  இவை,  பின்னர், பின்னை, முன்னர், முன்னை
எனத்  திரிந்தும்  வரும்.  கால்: ‘வலனாக வினையென்று வணங்கிநாம்
விடுத்தக்கால்’  (கலி.  35:15)  என  இறப்பும்,  ‘அகன்றவர்  திறத்தினி
நாடுங்கால்’  (கலி.16:3,4)  என  நிகழ்வும்  எதிர்வும்பற்றி வரும். கடை:
‘தொடர்கூரத்   துவ்வாமை   வந்தக்   கடை’   (கலி.  22:21,22)  என
இறப்புப்பற்றி   வரும்.   வழி:  ‘விடுவழிச்  விடுவழிச்  சென்றாங்கவர்,
தொடுவழித்  தொடுவழி  நீங்கின்றாற்  பசப்பே’  (கலி.  130:20,21) என
இறப்பும்,  ‘அவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே!’ (அகம். 49:
17,18)  என  நிகழ்வும்,  உரைக்கும்வழி  என  நிகழ்வும் எதிர்வும்பற்றி
வரும்.  இடத்து:  ‘களையுநர்  கைகொல்லுங்  காழ்த்த விடத்து’ (குறள்.
879)  என  இறப்பும்,  உரைக்குமிடத்து  என நிகழ்வும்  எதிர்வும்பற்றி
வரும். 

அன்னமரபின்