|
(இ-ள்.)
ஏனை எச்சம்-முதல் நிலை மூன்றும் அல்லாத பிற
வினையெச்சம், வினை முதலானும்-வினைமுதல் வினையானும், ஆன்வந்து இயையும் வினைநிலையானும்-ஆண்டு வந்து பொருந்தும் பிற வினையானும், தாம் இயல் மருங்கின் முடியும் என்ப-வரையறை இன்றித் தாம் இயலுமாற்றான் முடியும் என்று சொல்லுவர்
ஆசிரியர், எ-று.
|
|
(எ-டு.) மழை பெய்தெனப் புகழ் பெற்றது; மழை பெய்தென மரம் குழைத்தது எனவும், மழை பெய்யியர் எழுந்தது; மழை பெய்யியர் பலி கொடுத்தனர் எனவும், மழை பெய்யிய முழங்கும்; மழை பெய்யிய வான் பழிச்சுதும் எனவும், மழை பெய்யின் புகழ் பெறும்; மழை பெய்யின் குளம் நிறையும் எனவும், மழை பெய்யப் புகழ் பெற்றது; மழை பெய்ய மரம் குழைத்து எனவும், மழை பெய்தற்கு முழங்கும்; மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் எனவும், இறந்தபின் இளமை வாராது; கணவன் இனிது உண்ட பின் காதலி முகம் மலர்ந்தது எனவும், கடுத் தின்னாமுன் துவர்த்தது; மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது எனவும், உரைத்தக்கால் உரைபல்கும்; ‘வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால், சுடரிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை’ (கலி. 35:15,16) எனவும் நல்வினைதான் உற்றறக்கடை உதவும்; நல்வினைதான் உற்றக்கடை தீவினை வாரா எனவும், நல்வினை தான் உற்றவழி உதவும்; நல்வினைதான் உற்ற
|