|
|
|
அதன் குறிப் பெச்சமும் உடன் அடுக்கி முடிந்தனவும் பிறவும் ‘பன்முறை யானும்’ என்ற தனாற் கொள்க.
|
|
வினையெச்சம் பன்முறையான் அடுக்கி ஒரு சொல்லான்
முடியும், எனவே, பெயரெச்சம் ஒரு முறையான் அடுக்கி
ஒரு சொல்லான் முடியும், என்பதாம். ‘நெல் அரியும்
இருந்தொழுவர்’ (புறம். 24) என்னும் புறப் பாட்டினுள,
பாயுந்து, தூங்குந்து, தரூஉந்து, பாயும் என்னும் பெயரெச்சம்|
அடுக்கி மிழலை என்னும் ஒரு பெயர்கொண்டு முடிந்தன.
ஆண்டு நல்லூர் கெழீ இய என்னும்
பெயரெச்சம் இடைநிலையாய் வந்தது. 36)
|
|
பெயரெச்சத்திற்கு முடிக்கும் சொற்கள்
|
|
236.
|
நிலனும் பொருளும் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ்வறு பொருட்குமோ ரன்ன உரிமைய
செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே.
|
|
இது செய்யும், செய்த என்னும் பெயரெச்சத்திற்குப் பொருள்முடிபு கூறுகின்றது.
|
|
(இ-ள்.)
செய்யும் செய்த என்னும் சொல்லே - செய்யும்,
செய் என்னுஞ் சொற்கள் (இன்னதற்கு, இது பயன் என்னும்
இரண்டு ஒழித்து); நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற்கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கும்
ஓரன்ன உரிமைய - நிலப்பொருளும் செயப்படு பொருளும்
காலப்பொருளும் கருவிப் பொருளும் வினைமுதற் பொருளும்
என்ற ஐந்துடனே வினைப்பொருளுங்கூடச் சொல்லப்பட்ட
அவ்வறு வகைப் பொருட்கும் ஒத்த உரிமையினை
உடையவாம், எ-று.
|
|
(எ-டு.) வாழும் இல், கற்கும் நூல், துயிலும் காலம், வனையும்
கோல், ஓதும் பார்ப்பான்
|
 |