நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   700
Zoom In NormalZoom Out


 

ளின் பாகுபாடு கூறுகின்றது.
 

(இ-ள்.)     அவைதாம்-முற்கூறிய இடைச்சொற்கள் தாம், புணரியல்
நிலையிடைப்   பொருள்   நிலைக்கு  உதநவும்-இரு  மொழி  தம்மில்
புணர்தல்   இயன்ற  நிலைமைக்கண்  அவற்றின்  பொருள்  நிலைக்கு
உதவிசெய்து வருவனவும், வினைசெயல்  மருங்கிற் காலமொடு வருநவும்
-   முதல்நிலை   நின்று  காரியத்தினைத்  தோற்றுவிக்கும்  இடத்துக்
காலங்காட்டும்   இடைச்சொற்களோடே   பாலும்   இடமும்   காட்டும்
இடைச்சொற்களாய்  வருவனவும்,  வேற்றுமைப்  பொருள்வயின் உருபு
ஆகுநவும்-வேறுபடச் செய்யுஞ்  செயப்படுபொருள் முதலாயவற்றின்கண்
உருபு   ஆகுநவும்   -    வேறுபடச்   செய்யுஞ்   செயப்படுபொருள்
முதலாயவற்றின்கண்    உருபு   என்னுங்   குறியவாய்   வருவனவும்,
அசைநிலைக்  கிளவி ஆகி  வருநவும்-தமக்கொரு பொருளின்றித் தாஞ்
சார்ந்த   பெயர்   வினைகளை   அசையப்பண்ணும்  நிலைமையவாய்
வருவனவும், இசைநிறைக் கிளவி  ஆகி வருநவும் - செய்யுட்கண் இசை
நிறைத்தலே   பொருளாக   வருவனவும்,   தத்தங்குறிப்பிற்  பொருள்
செய்குநவும்-கூறுவார்  தாந்தாங்  குறித்த குறிப்பினானே அவர் குறித்த
பொருளை   விளக்கி   நிற்பனவும்,  ஒப்பு  இல்  வழியான்  பொருள்
செய்குநவும்-கூறுவார்  தாந்தாங்  குறித்த குறிப்பினானே அவர் குறித்த
பொருளை   விளக்கி   நிற்பனவும்,  ஒப்பு  இல்  வழியான்  பொருள்
செய்குநவும்-நாடகவழக்கினான்       உயத்துணரினன்றி     உலகியல்
வழக்கினாற்    காட்டப்படுவதோர்    ஒப்பின்றி   நின்ற   ஒப்புமைப்
பொருண்மையை    உணர்த்தி    வரும்   உவமவுருபுகளும்,   என்று
அப்பண்பினவே     நுவலுங்காலை    -    என்று    சொல்லப்பட்ட
அவ்வேழியல்பினை யுடைய சொல்லுமிடத்து, எ-று.
 

பொருள்நிலைக்குதவுவன,     எல்லாம் என்பதனை வற்றுச் சாரியை
அஃறிணை  யாக்கியும்,  நம்முச் சாரியை உயர்திணை யாக்கியும் நிற்பன
போல்வன.  இதனானே,  காரம்,  கரம்  முதலிய எழுத்துச் சாரியையுங்
கொள்க.
 

(எ-டு.) உண்டான்