|
சொற்கள் தாம் அவ்வச் சொற்குக் கூறிய அவையே பொருளென நிலைபெறச் சொல்லப்பட்ட இயல்பையுடைய ஆயினும், வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித் திரிந்து வேறுபடினும்-தாம் அடைந்து வரும் வினையொடும் பெயரொடும் ஆராய்ந்து உணரத் தோன்றி வேறு பொருளவாயும் அசை நிலையாயும் திரிந்துவரினும், தெரிந்தனர் கொளல்-ஆராய்ந்து கொள்க. எ-று.
|
|
(எ-டு.) ஓகாரம்: ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ?’ (அகம்.46:16) என ஈற்றசையாயும், ‘கலக்கொண்டன கள்ளென்கோ! காழ்க் கொண்டன சூடென்கோ!’ என எண்ணாயும், ‘நீங்கின ளோவென் பூங்கணோளே!’ (ஐங்குறு.375) என இரக்கக் குறிப்பாயும் வந்தது. என என்பது: ‘ஊரெனப் படுவ துறையூர்’ எனச் சிறப்பின்கண் வந்தது. அவர் நமக்குத் தஞ்சம் அல்லர் எனத் தஞ்சக் கிளவி, பற்று என்கின்றது. மா: ‘ஓர்கமா தோழி! அவர் தேர்மணிக் குரலே’ என முன்னிலைக்கண் அசைச்சொல்லாயும், ‘ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே’ (புறம்.193:4) என முன்னிலையன்றி அசைச்சொல்லாயும் வந்தது. ‘அதுமன் கொண்கன் தேரே’ என மன் அசைநிலையாய் வந்தது. சாரியை இன்: ‘காப்பின் ஒப்பின்’ (73) என அசை நிலையாயும் வந்தது. இனி, உருபு பொருண்மை நோக்கிய ஐகாரமும், ‘நேரை நோக்க நாரரி பருகி’ எனவும், ‘முனையுண்டவ ருருகும் பசுந்தினைப் பிண்டியும்’ எனவும் அசைநிலையாய் வருதலுங் கொள்க.
|