நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   732
Zoom In NormalZoom Out


 குறிப்பினையும்   உவப்பு   உவகை   என்னுங்    குறிப்பினையும்
உணர்த்தும், எ-று.
 

(எ-டு.)  ‘விசும்புகந்  தாடா  திரைதேர்ந்  துண்ணாது.’ ‘உவந்துவந்’
தார்வ  நெஞ்சமோ டாய்நலன்  அளைஇ’ (அகம். 35:11, 12) என வரும்.
(8)

பயப்பு என்பதன் பொருள்  

307. பயப்பே பயனாம். 

இதுவும் அது. 

(இ-ள்.)  பயப்பே  பயனாம்  -  பயப்புப்  பயன் என்னும்  குறிப்பு
உணர்த்தும், எ-று.
 

(எ-டு.) ‘பயவாக், களநனையர் கல்லா தவர்.’ (குறள்.406) என வரும். (9) 

பசப்பு என்பதன் பொருள் 

308. பசப்புநிறன் ஆகும்.
 

இது பண்பு. 

(இ-ள்.)  பசப்பு  நிறன்  ஆகும் - பசப்பு  நிறன்  என்னும்  பண்பு
உணர்த்தும், எ-று.
 

(எ-டு.) ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே.’  (கலி. 7:8) என வரும்.
(10)
 

இயைபு என்பதன் பொருள் 

309. இயைபே புணர்ச்சி.
 

இது குறிப்பு. 

(இ-ள்)  இயைபே  புணர்ச்சி - இயைபு  கூட்டம்  என்னும் குறிப்பு
உணர்த்தும், எ-று.
 

(எ-டு.) ‘வளன்வலி யுறுக்கும் உளமி லாளரோ, டியைந்த  கேண்மை
இல்லா கியரோ! (புறம். 190:4,5) என வரும். (11)
 

இசைப்பு என்பதன் பொருள் 

310. இசைப்பிசை யாகும்.
 

இஃது இசை கூறுகின்றது. 

(இ-ள்.)  இசைப்பு  இசையாகும்-இசைப்பு  இசைப் பொருண்மையை
உணர்த்தும், எ-று.
 

(எ-டு.) ‘வாயிற் றோன்றி யாழிசையூப் புக்கு’ என வரும். (12) 

அலமரல், தெருமரல் என்பவற்றின் பொருள்  

311. அலமரல் தெருமரல்ஆயிரண்டுஞ் சுழற்சி.
 

இது குறிப்பு. 

(இ-ள்) அலமரல்  தெருமரல் ஆயிரண்டும்  சுழற்சி-அலமரல் தெரு
மரல் ஆகிய அவ்விரண்டும் மனத்தடுமாற்றமாகிய குறிப்பு  உணர்த்தும்,
எ-று.
 

(எ-டு.)  ‘அலமரல்  ஆயம்’  (ஐங்குறு.64)  ‘தெருமரல்  உள்ளமோ
டன்னையும்  துஞ்சாள்’ என வரும்.  உலமரல் சொற்புறனடையாற் (389)
கொள்க. (13)
 

மழ, குழ என்பவற்றின் பொருள் 

312. மழவும் குழவும் இளமைப் பொருள.
 

இதுவும் அது. 

(இ-ள்.)   மழவும்  குழவும்  இளமைப்  பொருள - மழவும் குழவும்
இளமை என்பதன் குறிப்புப் பொருண்மையை உடைய, எ-று.
 

(எ-டு.) ‘வரைபுரையும்   மழகளிற்றின்மிசை’  (புறம். 38:1)  ‘உருவக்
குதிரை  மழவர்  ஓட்டிய’  (அகம். 1:2)  ‘தடமருப் பெருமை மடநடைக்
குழவி.’ (நற். 120) என வரும். (14)
 

சீர்த்தி, மாலை என்பவற்றின் பொருள் 

313. சீர்த்தி மிகுபுகழ் மாலை இயல்பே.
 

இதுவும் அது. 

(இ-ள்)  சீர்த்தி  மிகுபுகழ்  மாலை இயல்பே - சீர்த்தி மிகு புகழும்,
மாலை இயல்புமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
 

(எ-டு.) ‘வயக்கஞ்சால்  சீர்த்தி.’  ‘இரவரல்  மாலையனே (குறிஞ்சிப்.
239) என வரும். 15)
 

கூர்ப்பு, கழிவு என்பவற்றின் பொருள் 

314. கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் 

இதுவும் அது.