|
(இ-ள்.) கூர்ப்பும் கழிவும்
உள்ளது சிறக்கும் - கூர்ப்பும் கழிவும்
முன் சிறவாது உள்ளது ஒன்று சிறத்தலாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘இயங்கா
வையத்து வள்ளியோர் நசைஇத்,
துனிகூர்
எவ்வமொடு’ (சிறுபாண். 38, 39) ‘சினனே காமம்
கழிகண்ணோட்டம்’
பதிற் 22:1) என வரும். (16)
கதழ்வு, துனைவு என்பவற்றின் பொருள்
315.
கதழ்வும் துனைவும் விரைவின்
பொருள
இதுவும் அது.
(இ-ள்.) கதழ்வும் துவைும் விரைவின்
பொருள-கதழ்வும் துனைவும்
விரைவு என்னுஞ் சொல்லினது குறிப்புடைய, எ-று.
(எ-டு.) ‘அண்டர், கயிறரி எருத்தின்
கதழும் துறைவன்.’ (குறுந்.17)
‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின் ’(அகம்.9.16) என வரும். (17)
*(பாடம்) துனையும்
அதிர்வு, விதிர்ப்பு என்பவற்றின் பொருள்
316.
அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்.
இதுவும் அது.
(இ-ள்.)
அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்
- அதிர்வும்
விதிர்ப்பும் நடுக்கமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘அதிர
வருவதோர் நோய்’ (குறள். 429) ‘ விதிர்ப்புற லறியா
வேமக் காப்பினை’ (புறம்.20:19) என வரும். (18)
வார்தல், போகல், ஒழுகல் என்பவற்றின் பொருள்
317.
வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள.
இது பண்பு.
(இ-ள்.) வார்தல்
போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும்
செய்யும் பொருள - வார்தல், போகல்,
ஒழுகல் என்னும் மூன்று
சொல்லும் நேர்மையும் நெடுமையும் உணர்த்தும் பண்பினைத் தமக்குப்
பொருளாக உடைய, எ-று.
(எ-டு.) ‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையை (குறுந்.
14) ‘தெள்ளறல் தழீஇய வார்மணல் அடைகரை’ (அகம். 34:7) எனவும்,
‘போகுகொடி மருங்குல்.’ ‘திரிகாய்
விடத்தரொடு* காருடை போகி’
(பதிற்.13:14) எனவும், ‘ஒழுகு கொடி மருங்குல்.’ ‘மால்வரை
ஒழுகிய
வாழை’ (சிறுபாண்.21) எனவும் வரும்.
* (பாடம்) விடத்தேரொடு
தீர்தல், தீர்த்தல் என்பவற்றின் பொருள்
318.
தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்.
இது குறிப்பு.
(இ-ள்.)
தீர்தலும் தீர்த்தலும்
விடற்பொருட் ஆகும் - தீர்தலும்
தீர்த்தலும் விடல் என்னும் உரிச்சொல்லது
குறிப்புப் பொருண்மை
உடையவாம், எ-று.
(எ-டு.) ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற்.108) ‘நங்கை
|