|
(அகம். 198:3) எனவும், ‘பேரிசை நவிரம் மேஎய் உறையும், காரி யுண்டிக்கடவுள்’ (மலைபடு. 82, 83) எனவும் வரும். (31)
ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய்: பொருள்
330.
ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.
இதுவும் அது.
(இ-ள்.)
ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் ஆவயின் நான்கும்- ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் என்னும் உரிச்சொல் முதனிலையாகிய அவ்விடத்து வந்த குறிப்புப் பெயர் நான்கும், உள்ளதன் நுணுக்கம்-பண்டு உள்ளது ஒன்றனது நுணுகுதலை உணர்த்தும், எ-று.
சாய்தல் விகாரப்பட்டது.
(எ-டு.)
‘வேனில் உழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி.7:1) ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி.6:2) ‘நிழத்த யானை மேய்புலம் படர’ (மதுரைக்.303) ‘கயலறல் எதிரக் கடும்புனல் சாஅய்’ (நெடுநல்.18) என வரும். ஆய்ந்த தானை என்றது, பொங்குதல் அவிதலான் நொசிந்த துகில் என்றவாறு. (32)
புலம்பு என்பதன் பொருள்
331.
புலம்பே தனிமை.
இதுவும் அது.
(இ-ள்.) புலம்பே தனிமை
- புலம்பு தனிமை என்னுங் குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.)
‘புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி’
(அகம். 7:18) என
வரும். தமி என்பத சொல் புறனடையாற் (389) கொள்க. (33)
துவன்று என்பதன் பொருள்
332. துவன்றுநிறை வாகும்.
இதுவும் அது.
(இ-ள்)
துவன்று நிறைவு ஆகும்-துவன்று நிறைவு என்னுங்
குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.)
‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்’ (பதிற்.11:23) என
வரும்.(34)
முரஞ்சல் என்பதன் பொருள்
|