நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   740
Zoom In NormalZoom Out


உணர்த்துதல் ‘கூறிய கிளவி’ (390) என்பதனாற் கொள்க. (51)  

அழுங்கல் இரக்கமுங் கேடும் உணர்த்தல்  

350. அவற்றுள்,
அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும். 

இஃது, எய்தியதன்மேல் சிறப்பு விதி. 

(இ-ள்.) அவற்றுள் அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்-அந்நான்
கனுள்,  அழுங்கல்  அரவமே அன்றி இரக்கமுங் கேடுமாகிய குறிப்பும்
உணர்த்தும், எ-று. 

(எ-டு.)   ‘பழங்க  ணோட்டமும்  நலிய  அழுங்கின  னல்லனோ
அயர்ந்ததன்   மணனே,   (அகம்.66:25-6)   ‘குணனழுங்கக்,   குற்றம்
உழைநின்று கூறும் சிறியவர்கட்கு’ (நாலடி.353) என வரும். (52) 

கழுமு என்பதன் பொருள்  

351. கழுமென் கிளவி மயக்கமுஞ் செய்.யும் 

இது குறிப்பு. 

(இ-ள்.) கழுமு என் கிளவி மயக்கம்  செய்யும்  -கழுமு  என்னுஞ்
சொல் மயக்கமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.)‘கழுமிய ஞாட்பினுள் மைந்திழந்தார்* இட்ட’ (களவழி.11) என
வரும். 

இது, ‘கழும முடித்துக் கண்கூடு கூழை’ (கலி.56:3) எனத் திரட்சியை
உணர்த்துதல், ‘கூறிய கிளவி’ (390) என்பதனாற் கொள்க. (53) 

*(பாடம்) மைந்திழைத்தார் 

செழுமை என்பதன் பொருள் 

352. செழுமை வளனுங் கொழுப்பும் ஆகும். 

இதுவும் அது. 

(இ-ள்.) செழுமை வளனுங் கொழுப்பும்  ஆகும்-செழுமை வளனுங்
கொழுப்புமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.) ‘செழுஞ்செய்ந் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர்.’‘செழுந்தடி
தின்ற செந்நாய் ஏற்றை’ என வரும். 

‘வளத்தொடு   கொழுப்பிடை வேற்றுமை என்னை?’ எனின், வளம்
என்பது,  ஆக்கம்;  கொழுப்பு  என்பது,  ஊன்  தொடக்கத்தனவற்றது
நிணங்கோடலிழுதிருப்பு. (54) 

விழுமம் என்பதன் பொருள் 

353. விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும். 

இதுவும் அது. 

(இ-ள்.) விழுமம் சீர்மையும்  சிறப்பும்  இடும்பையும்  -  விழுமஞ்
சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.)  ‘விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு’ (நாலடி. 159)
‘வேற்றுமை   இல்லா  விழுத்திணைப்  பிறந்து’  (புறம்.27:3)  ‘நின்னுறு
விழுமம் களைந்தோள்’ (அகம்.170:13) என வரும். (55)

கருவி என்பதன் பொருள் 

354. கருவி தொகுதி. 

இதுவும் அது. 

(இ-ள்.) கருவ தொகுதி-கருவி தொகுதியாகிய  குறிப்பு  உணர்த்தும்,
எ-று, 

உணர்த்துங்கால் பலவற்றது கூட்டத்தை விளக்கும். 

(எ-டு-) ‘கருவி  வானம் கதழுறை சிதறி’  (அகம்.  4:6) என வரும்.
ஆண்டு மின்னும் முழக்கும் காற்றும் என்பன இத்தொகுதி. (56) 

கமம் என்பதன் பொருள் 

355. கமம் நிறைந் தியலும். 

இதுவும் அது. 

(இ-ள்.) கமம் நிறைந்து இயலும் -