|
கமம் நிறைவாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
சொல்லொடு பொருட்கு ஒற்றுமை கருதி நிறைந்து இயலும், எனப் பொருளின் தொழிலைச் சொன்மேல் ஏற்றினார்.
எ-டு. ‘கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை’ (முருகு.7) என வரும்.
(57)
அரி என்பதன் பொருள்
356.
அரியே ஐம்மை.
இதுவும் அது.
(இ-ள்)
அரியே ஐம்மை-அரி ஐம்மையாகிய குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘அரிமயிர்த் திரண்முன்கை’ (புறம்.11:1) என வரும். (58)
கவவு என்பதன் பொருள்
357. கவவகத் திடுமே.
இதுவும் அது.
(இ-ள்.)
கவவு அகத்திடுமே - கவவு அகத்தீடாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘கவவுக்கடுங் குரையள் காமர் வனப்பினள்’ (குறுந்.132) என வரும். இது, ‘கழூஉவிளங்*
காரம் கவைஇய மார்பே’ (புறம். 19:18) என எச்சமாங்கால் திரிந்து நிற்கும்.
(59)
* (பாடம்) கழுவிளங்
துவைத்தல், சிலைத்தல், இயம்பல், இரங்கல் : பொருள்
358.
துவைத்தலுஞ் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப்பொருட் கிளவி என்மனார் புலர்.
இஃது இசை.
(இ-ள்.)
துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கம் இசைப் பொருட்கிளவி என்மனார் புலவர் - துவைத்தல் முதலிய நான்கும் இசைப்பொருளை உணர்த்துஞ் சொல்லாம் என்று கூறுவர் புலவர், எ-று.
(எ-டு.) ‘முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை
துவைப்பவும்’ (புறம்
158:1) ‘ஆமா நல்லேறு சிலைப்ப’ (முருகு. 315) ‘கடிமரம்
தடியும்
ஓதை* தன்னூர், நெடுமதில் வரைப்பிற் கடிமனை இயம்ப’ (புறம்.
36:9, 10) ஏறிரங் கிருளிடை இரவினிற் பதம்பெறாஅன்’ (கலி.46:10)
என வரும். (60)
* (பாடம்) ஓசை
இரங்கல் கழிவாகிய குறிப்பும் உணர்த்தல்
359. அவற்றுள்,
இரங்கல், கழிந்த பொருட்டும்
ஆகும்.
இஃது, எய்தியதன் மேல் சிறப்பு விதி.
(இ-ள்.)
அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும் -அந்நான்
கனுள் இரங்கல் இசையே அன்றி ஒரு பொருளது கழிவான் பிறந்த
வருத்த மாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்’ (புறம். 10:11) என வரும். இஃது, ‘இனிநினைந் திரக்க மாகின்று’ (புறம்.243:1)
என இரக்கம் எனவும் நிற்கும், உம்மை, இறந்தது தழீஇயிற்று. (61)
இலம்பாடு, ஒற்கம் என்பவற்றின் பொருள்
360. இலம்பா டொற்கம் ஆயிரண்டும் வறுமை.
இதுவும் அது.
(இ-ள்.)
இலம்பாடு - இலம் என்னுஞ் சொல் குறிப்புச்சொல் தன்மைப்பட்டு இன்மை
|