நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   748
Zoom In NormalZoom Out


வற்றையும்,  முன்னும் பின்னும் வருபவை நாடி தத்தமக்கு முன்னும்
பின்னும்   வரும்   மொழிகளை   ஆராய்ந்து,   ஒத்த   மொழியான்
புணர்த்தனர்  உணர்த்தல்  -  அம்மொழிகளுள் தமக்குப் பொருந்தின
மொழியொடு  கூட்டிப்  பொருள்  உணர்த்துக;  மரபின்  - அங்ஙனம்
உணர்த்தி   வரலாற்று   முறைமையானே,   தத்தம்   பொருள்  மன்
தோன்றும்-தத்தமக்கு உரிய பொருள் விளங்கித் தோன்றும், எ-று. 

எனவே, உரிச்சொல் ஆணையான் பொருள் உணர்த்தாது, வரலாற்று
முறைமையான் பொருள் உணர்த்தும், என்றார். 

(எ-டு.)    போகுகொடி  மருங்குல்  என்பதில்   போகல்  என்பது
முன்வருஞ்   சொல்லான்    நேர்மையை   உணர்த்திற்று.   ‘திரிகாய்
விடத்தரொடு*  காருடை போகி’ (பதிற். 13:14) என்பதில் போகல் என்து
பின் வருஞ் சொல்லான் நெடுமையை உணர்த்திற்று ‘உறுகால்’ (நற்.300)
என்பது   முன்   வருங்   கால்   என்னுஞ்   சொல்லான்  மிகுதியை
உணர்த்திற்று.  ‘அணங்கிய  செல்லல்’ (அகம்.22:3) என்பது  பின்வரும்
அணங்கிய   என்னுஞ்   சொல்லான்   இன்னாமையை  உணர்த்திற்று.
இங்ஙனங்  கூறவே, ‘முன்னும், பின்னும் மொழியடுத்து வருதலும்’ (253)
என இடைச்சொற்கு ஓதிய விதி இதற்குங் கூறினாராயிற்று. (91) 

* (பாடம்) விடத்தேரோடு 

உரிச்சொற்களுக்குப் பொருட் புறனடை

390. கூறிய கிளவிப் பொருள்நிலை அல்ல
வேறுபிற தோன்றினும் அவற்றொடு கொளலே. 

இதுவும் அது. 

(இ-ள்.)  கூறிய   கிளவிப்   பொருள்நிலை   அல்ல   வேறுபிற
தோன்றினும் -  முன்னும் பின்னும் வருபவை   நாடியவழி  முற்கூறிய
உரிச்சொற்களின் பொருள்நிலைமை  அல்லாத  வேறு  பிற  பொருள்
தோன்றுமாயினும், அவற்றொடு   கொளல்-அக் கூறப்பட்டனவற்றோடே
அவற்றையும் உரிச்சொல்லாகக் கொள்க, எ-று. 

(எ-டு.)    கடிநாறும் பூந்துணர் என்றால், முற்கூறியவற்றிற்கு ஏலாது
மணப்பொருட்டு   ஆயிற்று.   ‘மரம்  புரைபட்டது’  என்பது  உயர்வு
பொருள் குறித்தது என்று கொள்ளற்க; பொந்துபட்டது என்