|
வேண்டும் வழி மெல்லொற்று ஆக்கலும், விரிக்கும்
வழிவிரித்தலும்-
சந்தி நிரம்புதற்கு ஒரு சொல்லை விரிக்க வேண்டும்வழி விரித்தலும், தொகுக்கும்வழித் தொகுத்தலும் - சந்தம் உளவாதற்கு ஒரு சொல்லைத் தொகுக்க வேண்டும்வழித்
தொகுத்தலும், நீட்டும்வழி நீட்டலும்-குற்றெழுத்தினை நீட்ட வேண்டும் வழி நீட்டலும், குறுக்கும்வழி குறுக்கலும்-நெட்டெழுத்தினைக் குறுக்க வேண்டும் வழிக் குறுக்கலுமாகிய அறுவகை விகாரமும், நாட்டல் வலி என்மனார் புலவர் - செய்யுள் இன்பம் பெறச் செய்வார் நாட்டுதலை வலியாக உடைய என்று கூறுவர் புலவர், எ-று.
(எ-டு.) ‘முத்தை வரூஉங் காலம் தோன்றின்.
’ (எ.164) ‘குன்றிய
லுகரத் திறுதி ஆகும்.’ (எ.8) ‘தண்ணந் துறைவன் கொடுமை.’
(குறுந்.9) ‘இடையெனப் படுப.’ (251) ‘வெள்வளை நல்காள் வீடுமென்
உயிரே.’ ‘திருத்தார்நன் றென்றேன் தியேன்’ என முறையே காண்க.
‘பாசிலை, (புறம். 54:10) ‘அழுந்துபடு விழுப்புண்’ (நற்.97) என்றாற்போல இரண்டு விகாரம் வருவனவற்றை ‘நாட்டல் வலிய’ என்றதனாற் கொள்க. (7)
பொருள்கோள் வகை
404.
நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று
அவைநான் கென்ப மொழிபுணர் இயல்பே.
இது, செய்யுள் செய்வழி அதன் பொருட்கிடை கூறுகின்றது.
(இ-ள்.)
பொருள்
உணர்த்தும் சொற்கள் அங்ஙனம் இயற்கையாகக்
கூடிப் பொருள் உணர்த்தாது விகாரப்பட்டுப் பொருள் உணர்த்துங்கால்,
அவை - அவ்விகாரவகை, நிரல்நிறை கண்ணம்
அடிமறி மொழிமாற்று
நான்கு என்ப - நிரல்நிறையும் சுண்ணமும் அடிமறியும் மொழிமாற்றும்
என நான்கு என்று கூறுவர் ஆசிரியர் எ-று.
நிரல்நிறையுஞ் சுண்ணமும், நிரலே நிறுத்தலுந் துணித்துக்
கூட்டுதலுமாகிய வேறுபாடு உடைமையின், மொழிமாற்றின் வேறாயின.
(8)
நிரல்நிறைப் பொருள்கோள்
405. அவற்றுள்,
|