|
டாஅக்
|
|
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்
|
|
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலைஇருந்து
|
|
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயா’
(புறம்,3:7-12)
|
|
என்றாற்போல வருவன எல்லாம் ‘அணுகிவந்த மாட்டு’ என்னும் உறுப்பு. ‘ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும்’ என்பதும் அது. ‘அகன்று வந்த மாட்டு’ முருகாற்றுப்படை முதலியவற்றுட் காண்க.
|
|
மொழிமாற்றாவது, கேட்டோர் கூட்டி உணருமாற்றான் ஈரடிக் கண்ணே வருவது என்றும், மாட்டு என்னும் உறுப்பாவது, இரண்டு இறந்த பல அடிக்கண்ணும் பல செய்யுள் தொடரின்கண்ணும் அகன்றும் அணுகியும் வரும் என்றும் உணர்க. அஃது,
|
|
‘அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல்
மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்.’ (210)
|
|
என்னுஞ் செய்யுளியற்சூத்திரத்தான் உணர்க. உதாரணங்கள்
ஆண்டுக் காட்டுதும்.
|
|
பூட்டுவிற் பொருள்கோளும், அளைமறி பாப்புப் பொருள் கோளும்,
தாப்பிசைப் பொருள்கோளும், கொண்டு கூட்டுப் பொருள் கோளும் மாட்டு என்னும் உறுப்பின்கண் அடங்குமாறும்; யாற்றொழுக்குப் பொருள்கோள் யாப்பு என்றும் உறுப்பின்கண் அடங்குமாறும் உணர்க.
(13)
|
|
* (பாடம்) நரம்பார்த் தன்ன
|
|
கிளைப்பெயர்கள் பிரிக்கப்படா
|
|
410.
|
தநநுஎ என்னும் அவைமுத லாகிய
|
|
|
கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா.
|
|
இது, மேல் தொகைச்சொற்கூறுவான் தொகைபோல இருபொருள்
படுவன இவை என்கின்றது.
|
|
(இ-ள்.) த ந நு எ எனும் அவை முதலாகிய கிளை நுதற்
பெயரும்-‘த, ந, நு, எ’ என்கின்ற எழுத்துக்களை முதலாக உடைய ஒருவரோடு ஒருவர்க்கு உள்ள தொடர்ச்சிக்கிழமையைக் கருதின ஒட்டுப் பெயர்களும், பிரிப்பப் பிரியா - தொகைச்சொற் போல இரு பொருள்பட்டு நிற்பினும் அவைபோலப் பின்வரும் சொல் தம் பொருள் உணர்த்தாமையின் பிரிக்கப்படா, ஒரு சொல்லேயாய் நிற்கும், எ-று.
|
|
(எ-டு.) தமன், தமள், தமர்; நமன், நமள் நமர்; நுமன், நுமள், நுமர்;
எமன்,
|
 |