|
உணர்த்துதலின், ஆகிடன் உடைய என்றார்.
இவை
மூன்றும் இல்லென இரப்போர்க்கும்,
இடனின்றி இரப்
போர்க்கும், தொலைவாகி இரப்போர்க்கும் உரிய (கலி.2) என்று உணர்க.
ஈ என்பதன் மரபு
445.
அவற்றுள்,
ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே.
இது, முதலதன் மரபு கூறுகின்றது.
(இ-ள்) அவற்றுள்
ஈ என் கிளவி - முற்கூறிய மூன்றனுள்
ஈ
என்னுஞ் சொல், இழிந்தோன் கூற்று -
இரக்கப்படுவானின் இழிந்த
இரவலன் அவனை இரக்குங்கால் கூறுங் கூற்றாம், எ-று.
(எ-டு.) ‘பெருமா!
எனக்கொரு பிடிசோறீ’ எனவும், ‘ஈயென இரத்
தலோ அரிதே நீயது’ (புறம்.154:8) எனவும் இவ்விரண்டும் தன்மையும்
முன்னிலையும் பற்றி வந்தன.
‘சிறியகட்பெறினே
எமக்கீயும் மன்னே!’ (புறம். 235:1)
என்றது
உளப்பாட்டுத் தன்மையும் படர்க்கையும்
பற்றி வந்தது. ‘இவற்கீத்
துண்மதிகள்ளே.’ (புறம்.290:1) என்
புழியும் இவன் என்பத
முன்னிலையும் படர்க்கையும் என்று உணர்க. (49)
தா என்பதன் மரபு
446. தாவென்
கிளவி ஒப்போன் கூற்றே.
இஃது, இரண்டாவதன் மரபு கூறுகின்றது.
(இ-ள்.) தா
என் கிளவி - தன்மை முன்னிலைக்கு
உரிய தா
என்னுஞ் சொல், ஒப்போன் கூற்று -
இரக்கப்படுவானோடு ஒக்கும்
இரவலன் அவனை இரக்குங்கால் கூறும் கூற்றாம், எ-று.
(எ-டு.) எனக்குச்
சோறு தா என வரும். ‘மாணலம்
தாவென
வகுத்தற் கண்ணும்’ (தொல்.பொ.150) எனவும், ‘என்னலம் தாராய்’ (கலி.
128:10,11) எனவும், கொடு போல வருவன, கொடுப்பான் பொருளாய்க்
கொள்வான்கண் செல்லாதனவற்றை இரந்தன வாம்.
‘ஒப்போன்
கூற்று என்றாரேனும், சிறுபான்மை வலியாற்கொள்ளு
மிடத்தும் தா என்பது வரும் எனக் கொள்க.
‘நின்னது தாவென நிலைதளரக்,
குரங்கன்னபுன் குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகையொன்றென்கோ!’
(புறம்.136:12-14)
என வரும். (50)
கொடு என்பதன் மரபு
447. கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே.
|