இது நிலனுடைய நான்கற்குங் காலங்
கூறி அந்நான்கற்கும் பொதுவாகிய பாலைக்குங் காலங் கூறுகின்றது.
(இ-ள்)
நடுவு நிலைத்திணையே - பாலைத்திணை;
நண்பகல் வேனிலொடு - எற்பாடுங் காலையும்
என்னும் இரு கூற்றிற்கு நடுவணதாகிய ஒரு கூறு தான் கொண்டு வெம்மை செய்து பெருகிய பெரும்பகலோடும் இளவேனிலும் முதுவேனிலும் என்னும் இரண்டனோடும்; முடிவு நிலை மருங்கின் - பிரிவெனப்படுதற்கு முடிவுடைத்தாகிய குறிஞ்சியும் முல்லையுமாகிய ஒரு மருங்கின் கண்ணே; முன்னிய நெறித்து - ஆசிரியன் மனங்கொள்ளப்படும் நெறியையுடைத்து எ-று.
‘நிலை’
யென்றது நிலத்தினை. முடிவுநிலைப்பகுதிக்கண் முன்னப் படுமெனவே அத்துணை யாக்கமின்றி ஒழிந்த மருதமும் நெய்தலும் முடியாநிலமாய் அத்துணை முன்னப்படாவாயின
பாலைக் கென்பதாம். பிரிவின்கண் முடிய வருவன வெல்லாம் இவ்விரண்டற்கும் முடியவருதலும் ஒழிந்த இரண்டற்கும்
|