சாதிகளாம்.
இன்னோருந் தத்தந்
தொழில்வகையாற் பாகுடப மிகுதிப்படுத்தல்
வாகைத் திணையாம். ஒழிந்த
பகுதி ஐந்தற்கும் இஃதொக்கும்.
இன்னும் பெண்பாலுயர்ந்து ஆண்
பாலிழிந்தவழிப் பிறந்த சாதிகளும்
அனைநிலைவகைப் பாற்படும்.
யோகிகளாய் உபாயங்களான் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலைவகையோராவர்;
அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப்பக்கத்தாராவர். தகர்வென்றி பூழ்வென்றி கோழிவென்றி முதலியன பாலறிமரபிற்
பொருநர்கண் அனைநிலைவகையாம்.
ஒரு வரையறைப்படாது
பலதுறைப்படுவனவற்றை யெல்லாந் தொகைநிலையெனத் தொகுத்து ஒரோவொன்றாக்கிக் கூறினார்; தொகுத்துக் கூறலென்னும் உத்திவகையான். பார்ப்பன வாகை அரசவாகையென்றோதினால் அவற்றின் பகுதி அடங்காமையிற் குன்றக் கூறலாமாதலின் இங்ஙனமோதினார். காட்டாதனவற்றிற்கு உதாரணங்கள் வந்துழி வந்துழிக் காண்க. (20)
மறத்துறை ஒன்பதும்
அறத்துறை யொன்பதுமாக வாகைக் குரிய துறை
பதினெட்டாதல்
|