|
இதுவும் அது.
(இ-ள்)
தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் - தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக்கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக்
கொடுத்தலைக் கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் ஏத்தின துயிலெடை
நிலையும்;
‘கிடந்தோர்க்’
கெனப் பன்மைகூறவே, அவர் துயிலெடுப்புத் தொன்றுதொட்டு வருமென்பதூஉஞ், சூதர் மாகதர் வேதாளிகர் வந்திகர் முதலாயினோருட் சூதரே இங்ஙனம் வீரத்தான்
துயின்றாரைத் துயிலெடுப்புவரென்பதூஉம், யாண்டும் முன்னுள்ளோரையும்
பிறரையுங் கூறப்படுமென்பதூஉங் கொள்க. அவர் அங்ஙனந்
துயின்றமை பிறர்க்கும் புலப்படப் புகழல் அவர் கருத்தாகலின்
ஒருதலைக் காமம் உளதாயிற்று.
உ-ம்:
‘‘கானம் பொருந்திய கயவாய் மகளிரின் யானுறந் துயர நந்திய பானாள் இமையாக் கண்ணோ டமையாக் காத்தநின் மூதின் முதல்வன் றுயில்கொண் டாங்குப் போற்றா மன்னரை யெள்ளிச் சிறிதுநீ சேக்கை வளர்ந்தனை பெரும தாக்கிய வண்கை யவுண னுயிர்செல வாங்கவ னன்றுணர்ந் தாங்கு வென்றி மேய வாடா
வஞ்சி
|