நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2473
Zoom In NormalZoom Out


யிற்று.

உ-ம்:

‘‘அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போன் மாண்ட களிறூரந்தார் - எந்தை
யிலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு.’’            (முத்தொள்.40)

இது சிலம்பி கூடிழக்குந்துணை அடங்கலும் வெளியாயிற்றென்றலின்
வெள்ளணியாயிற்று.

‘‘செய்கை யரிய களவழிப்பா முன்செய்த
பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய
மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்தி
கொலைச்சிறைதீர் வேத்துக் குழாம்’’

இது சிறைவிடுதல் கூறிற்று.

‘‘கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர்
தேர்வேந்தன் தென்னன் திருவுத்த ராடநாட்
போர்வேந்தன் பூச லிலன்’’             (முத்தொள்.39)

இது செருவொழிந்தது.

‘‘ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான்
வாமான்றேர்க் கோதை சதயநாள் - ஆமாறு
காம நுகருமின் கண்படுமி னென்னுமே
யேம முரசின் குரல்’’

இதனுள்  இழிகுலத்தோன்  பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர்
கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும்  ஒக்கும். பெருமங்கல மென்றதனானே
பக்கநாளுந்  திங்கடோறும்  வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை
யுணர்க.

சிறந்த     சீர்த்தி மண்ணுமங்கலமும் - அரசர்க்குச் சிறப்பெய்திய
மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும்;

இதனைப்   பிறந்தநாளின்  பின்வைத்தார்,  பொன்முடி   புனைந்த
ஞான்று   தொடங்கி  யாண்டுதோறும்  இது  வருமென்றற்கு.  குறுநில
மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணு  மங்கலமும்
கொள்க. உ-ம்:

‘‘அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள் வேய்ந்த
வொளிமுடி பொன்மலையே யொக்கு - மொளிமுடிமேன்
மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே
லந்தரத்துக் கங்கை யனைத்து’’

என வரும்.

இதனானே  யாண்டு   இத்துணைச்    சென்றதென்று    எழுதும்
நாண்மங்கலமும் பெறுதும்.

நடைமிகுத்து ஏத்திய குடைநிழன்  மரபும்  - உலக வொழுக்கத்தை
இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல திலக்கணமும்;

இங்ஙனம்  புனைந்துரைத்தற்கு   ஏதுவாயது   நிழலாம்; என்னை?
அந்நிழல்     உலகுடனிழற்றியதாகக்     கூறுதலும்பட்டுக்     குடி
புறங்காத்தற்குக் குறியாகக் ‘குடைகொண்டே’ னென்று அக் கொற்றவன்
குறிக்கவும் படுதலின்.

மரபென்றதனாற்  செங்கோலுந்   திகிரியும்    போல்வனவற்றைப்
புனைந்துரை