நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2507
Zoom In NormalZoom Out


 

வாய்க் குவளையும்
அஞ்சிலோதி யசையியற் கொடிச்சி
கண்போன் மலர்தலு மரிதிவள்
தன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே.”      (ஐங்குறு.299)

இஃது  இருவரும் உள்வழி வந்த தலைவன் தலைவி தன்மை கூறவே
இவள்கண்ணது  இவன்  வேட்கையென்று  தோழி  குறிப்பான் உணரக்
கூறியது.

குன்றநாடன், முருகன்; அவள் தந்தையுமாம்.

“உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க் கமழகில்
ஆரம் நாறும் அறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கண் கொடிச்சி
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே.”     (குறுந்.286)

இதுவும் அது.

இது  முதலியவற்றைத்   தலைவன்   கூற்றாகவே  கூறாது  தோழி
கூறினாளாகக்கூறி   அவ்விடத்துத்  தலைவன்  மடன்மா  கூறுமென்று
பொருள்  கூறின், ‘நாற்றமுந் தோற்றமும்’ (தொல்.பொ.114) என்னுஞ்
சூத்திரத்துத் தோழி இவற்றையே கூறினாளென்றல் வேண்டாவாம், அது
கூறியது கூறலாமாகலின்.

தண்டாது   இரப்பினும் - இடந்தலைப்பாடு முதலிய கூட்டங்களான்
அமையாது பின்னும் பகற்குறியையும் இரவுக் குறியையும் வேண்டினும்:

உ-ம்:

“கொண்டன் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோ லிணர பெருந்தண் சாந்தம்
வகைசே ரைம்பா றகைபெற வாரிப்
புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ணாயம் உவப்பத் தந்தை
நெடுந்தேர் வழங்கும் நிலவுமணன் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியன்மா நெஞ்சே யென்னதூஉம்
அருந்துய ரவலந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லை யானுற்ற நோய்க்கே.”       (நற்.140)

இதில் பரிவிலாட்டியையென இரண்டாவது விரிக்க.

“கடுந்தே ரேறியுங் காலிற் சென்றும்
கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும்
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனைய மாகவும் செய்தார்ப்
பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை
யொளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத
பெரும்புண் உறுநர்க்குப் பேஎய் போலப்
பின்னிலை முனியா நம்வயின்
என்னென நினையுங்கொல் பரதவர் மகளே.”     (நற்.349)

தோழி நம்வயிற் பரதவர் மகளை யென்னென நினையுங்கொலென்க.

“பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய்
தாலொத்த வைவனங் காப்பாள்கண் - வேலொத்தென்
நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பா ளெவன்கொலோ
வஞ்சாயற் கேநோவல் யான்.
           (திணை.நூற்.19)

இவை பகற்குறி இரந்தன.

“எல்லும் எல்லின் றசைவுபெரி துடையேன்