நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2566
Zoom In NormalZoom Out


 

சென்றமை  தோன்ற  ஆண்டு  ஒரு  குறி  செய்  எனக் கூறுவனவுங்
கொள்க.

“கான மானதர் யானையும் வழங்கும்
வான மீமிசை யுருமுநனி உரறும்
அரவும் புலியும் அஞ்சுதக வுடைய
இரவுச் சிறுநெறி தமியை வருதி
வரையிழி யருவிப் பாடொடு பிரசம்
முழவுச்சேர் நரம்பி னிம்மென விமிரும்
பழவிற னனந்தலைப் பயமலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை யொன்றோ
இன்றுதலை யாக வாரல் வரினே
ஏமுறு துயர நாமிவ ணொழிய
எற்கண்டு பெயருங் காலை யாழநின்
கற்கெழு சிறுகுடி யெய்திய பின்றை
ஊதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு
வேய்பயி லழுவத்துப் பிரிந்தநின்
நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே.”       (அகம்.318)

என்னும் நித்திலக்கோவையுள், ‘வரினே ஏமுறு துயரம் நாமிவ ணொழிய,
நின்னாய்  பயிர்  குறிநிலை  கொண்ட கோட்டை ஊதல்  வேண்டுமாற்
சிறிது’ என்றவாறு காண்க.

காப்பின் கடுமை கையற  வரினும்  -  காத்தற்றொழிலான் உண்டாங்
கடுஞ்சொற்கள் களவொழுக்கத்திடத்தே எல்லையற வருமிடத்தும்:

தோழிமேன கிளவி; அவை பலவகைய.

உ-ம்:

“கடலுட னாடியுங் கான லல்கியும்
தொடலை யாயமொடு தழூஉ அணி யயர்ந்தும்
நொதுமலர் போலக் கதுமென வந்து
முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே
துத்திப் பாந்தட் பைத்தக லல்குல்
திருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்கழைத்
தழையினு முழையிற் போகான்
தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே.”       (குறுந்.294)

இது, பகற்குறிக்கட் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.

“கணமுகை கையெனக் காந்தள் கவின
மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்
விறன்மலை நாட வரவரிதாங் கொல்லோ
புனமு மடங்கின காப்பு.”                 (திணை.ஐம்.2)

இது திணை விளைந்தமை கூறிச் செறிப்பறிவுறீஇயது.

“அறையருவி யாடாள் தினைவனமுங் காவாள்
பொறையுயர் தண்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யாள்
உறைகவுள் வேழமொன் றுண்டென்றா ளன்னை
மறையாதி வாழிய மையிருங் குன்றே.”

இது குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பறிவுறீ இயது.

“சாந்த மெறிந்து ழுத சாரற் சிறுதினைச்
சாந்த விதண மிசைச்சார்ந்து - சாந்தங்
கமழக் கிளிகடியுங் கார்மயி லன்னாள்
இமிழக் கிளியெழா வார்த்து.”             (திணை.நூற்.3)

இது பிறரைக் காத்தற்கு இடுவரெனச் செறிப்பறி வுறீஇயது.

“பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்தவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே.”       (குறுந்.244)

இஃது இரவுக்குறிக் காப்பின் கடுமை கூறியது.

“வினைவிளையச் செல்வம் விளைவதுபோ னீடாப்
பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய
மையார்