நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2571
Zoom In NormalZoom Out


 

தலின் அதன் பின் வைத்தார்.

“வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமற் - றாங்கெனைத்தும்
பாய்ந்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச்
சந்தனவாஞ் சேயரிக்கண் தாம்.”        (ஐந்திணை.ஐம்.15)

இதுவும் அது.

அவன்    விலங்குறினும் -   தன்னானுந் தலைவியானும் இடையீடு
படுதலன்றித்  தலைவனாற் கூட்டத்திற்கு இடையூறு தோன்றினும்;  அது
வரைவிடைப் பொருட்பிரிவும், வேந்தற்குற்வழியும், காவற்பிரிவுமாம்.

உ-ம்:

“செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு
பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம்
பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைஇய
அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து
பகன்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகனல்லை மன்ற வினி.”                      (கலி.19)

“நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த
பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக்
கண்ணினாற் காண வியையுங்கொ லென்றோழி
வண்ணந்தா வென்கந் தொடுத்து.”           (ஐந்.எழு.16)

களம்பெறக்  காட்டினும் - காப்பு மிகுதியானங் காதன் மிகுதியானுந்
தமர்  வரைவு  மறுத்ததனானுந் தலைவி ஆற்றாளாயவழி இஃதெற்றினா
னாயிற்றெனச்   செவிலி   அறிவரைக்   கூஉய்   அவர்   களத்தைப்
பெறாநிற்கத் தலைவியை அவர்க்கு வெளிப்படக் காட்டினும்.

களமாவது  கட்டுங்  கழங்கும்  இட்டுரைக்கும் இடமும்  வெறியாட்
டிடமுமாம்.

உ-ம்:

“பொய்படு பறியாக் கழங்கே மெய்யே
மணிவரைக் கட்சி மடமயி லாலுநம்
மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்
ஆண்டகை விறல்வே ளல்லனிவள்
பூண்டாங் கிளைமுலை யணங்கி யோனே.”    (ஐங்குறு.250)

இது கழங்குபார்த்துழிக் கூறியது.

“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
யறியா வேலன் வெறியெனக் கூறும்
அதுமனங் கொள்குவை யனையிவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.”   (ஐங்குறு.243)

இது தாயறியாமை கூறி வெறி விலக்கியது.

“அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடா னாயின்
என்பயஞ் செய்யுமோ வேலற்கு வெறியே.”    (ஐங்குறு.244)

இது தலைவிக்குக் கூறியது.

“நெய்த னறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழு மார்பன்
அருந்திறற் கடவு ளல்லன்
பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே.”    (ஐங்குறு.182)

இது வேலற்குக் கூறியது.

“கடவுட் கற்சுனை யடையிறந் தவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தட்
குருதி யொன்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை யடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி யின்னியத் தாடு நாடன்
மார்புதர வந்த படர்மலி யருநோய்
நின்னணங் கன்மை யறிந்து மண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவு ளாயினு மாக
மடவை மன்ற வாழிய முருகே.”                 (நற்.34)

இது முருகற்குக் கூறியது.

“அன்னை தந்த தாகுவ தறிவென்
பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி
முருகென மொழியு மாயின்
அருவரை நாடன் பெயர்கொலோ வதுவே.”   (ஐங்குறு.247)

இது தமர்கேட்பக் கூறியது.

பிறன்வரைவு    ஆயினும்  -  நொதுமலர் வரையக் கருதிய வழித்
தலைவி  சுற்றத்தார் அவ்வரைவினை ஆராயினும்: தோழி தலைவற்குந்
தலைவிக்குங் கூறும்.

உ-ம்:

“கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழுமீன் கொள்பவர் பாக்