நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2580
Zoom In NormalZoom Out


 

விளித்தது கனவின் அரற்றலாயிற்று.

அரற்றல், இன்னதோர் இன்னாக்காலத்து என்  செய்கின்றா  யெனக்
காதற்பற்றி இரங்குதல்.

தோழியை வினவலும்  -   நின்றோழிக்கு  இவ்வேறுபாடு  எற்றினா
னாயிற் றென்றாற்போலத் தோழியை வினாவுதலும்:

உ-ம்:

“நெடுவே லேந்தி நீயெமக் கியாஅர்
தொடுத லோம்பென வரற்றலு மரற்றும்
கடவுள் வேங்கையுங் காந்தளு மலைந்த
தொடலைக் கண்ணி பரியலு மென்னும்
பாம்புபட நிவந்த பயமழைத் தடக்கைப்
பூம்பொறிக் கழற்கா லாஅய் குன்றத்துக்
குறுஞ்சுனை மலர்ந்த குவளை நாறிச்
சிறுதேன் கமழ்ந்த வம்மெல் லாகம்
வாழியெம் மகளை யுரைமதி இம்மலைத்
தேம்பொதி கிளவியென் பேதை
யாங்கா டினளோ நின்னொடு பகலே.”

என வரும்.

இது செவிலி தோழியை வினாயது.

“ஓங்குமலை நாட வொழிகநின் வாய்மை
காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி
உறுபகை பேணா திரவின் வந்திவள்
பொறிகிள ராகம் புல்ல தோள்சேர்
பறுகாற் பறவை யளவில மொய்த்தலின்
கண்கோ ளாக நோக்கிப் பண்டு
மினையை யோவென வினவினள் யாயே
யதனெதிர் சொல்லா ளாகி அல்லாந்
தென்முக நோக்கி யோளே யன்னா
யாங்குணர்ந்த துய்குவள் கொல்லென மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
யீங்கா யினவா லென்றிசின் யானே.”             (நற்.55)

இது, செவிலி வினாயினமையைத் தோழி கொண்டு கூறினாள்.

தெய்வம்    வாழ்த்தலும் - இன்னதொன்று நிகழ்ந்ததெனத் துணிந்த
பின்னர்த்  தன்  மகளொடு தலைமகனிடை நிகழ்ந்த ஒழுக்கம் நன்னர்த்
தாகவெனத் தெய்வத்திற்குப் பராவுதலும்:

உ-ம்:

“பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறிபடை யம்பின் வல்விற் கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்
கண்பொரு திமைக்குந் திருமணி கிளர்ப்ப
வைந்நுதி வான்மருப் பொடிய வுக்க
தெண்ணீர் ஆலி கடுக்கு முத்தமொடு
மூவேறு தாரமு மொருங்குடன் சாற்றிச்
சாந்தம் பொறைமர மாக நறைநார்
வேங்கைக் கண்ணியன் இழிதரு நாடற்
கின்றீம் பலவி னேர்கெழு செல்வத்
தெந்தையு மெதிர்ந்தனன் கொடையே யலர்வாய்
அம்ப லூரு மவனொடு மொழியும்
சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி
யாயு மவனே யென்னும்யாமும்
வல்லே வருக வரைந்த நாளென
நல்லிறை மெல்விரல் கூப்பி
இல்லுறை கடவுட் கோக்குதும் பலியே.”        (அகம்.282)

இதனுள்   ‘தோள்பாராட்டி   யாயுமவனே  என்னும் என்று   யாய்
தெய்வம் பராயினாளென்பதுபடக் கூறி,