நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2648
Zoom In NormalZoom Out


 

ஒன்று தெளிய நசையின மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.”       (குறுந்.75)

இது, தலைவன் வரவை விரும்பிக் கூறியது.

“இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும்
உம்மையா மென்பவ ரோரார்காண் - நம்மை
எளிய ரென நினைந்த வின்குழலா ரேடி
தெளியச் சுடப்பட்ட வாறு.”            (திணை.நூற்.123)

இது, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறியது.

“பெருங்கடல் திரையது சிறுவெண் காக்கை
நீத்துநீ ரிருங்கழி யிரைதேர்ந் துண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்குந் துறைவனோடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே.”     (குறுந்.313)

இது, தலைவன் தவறிலனென்று கூறியது.

“உடலினே னல்லேன் பொய்யா துரைமோ
யாரவள் மகிழ்ந்த தானே தேரொடு
தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின்
வளமனை வருதலும் வௌவி யோளே.”      (ஐங்குறு.66)

இது, புதல்வனை நீங்கியவழிக் கூறியது.

“கண்டனெ மல்லமோ மகிழ்நநின் பெண்டே
பலரொடு பெருந்துறை மலரொடு வந்த
தண்புனல் வண்ட லுய்த்தென
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.”      (ஐங்குறு.69)

இது, காமஞ்சாலா விளமையோளைக் களவின் மணந்தமை அறிந்தே
னென்றது.

வாயிலின்   வரூஉம்   வகையொடு   தொகைஇ  -  வாயில் தன்
ஏதுவாகத் தலைவிக்கு வருங் கூற்று வகையொடு கூட்டி:

வாயில்களாவார்  செய்யுளியலுட் (512) கூறும் பாணன் முதலியோர்.
‘வகை’யென்றதனான் ஆற்றாமையும்  புதல்வனும் ஆடைகழுவுவாளும்
பிறவும் வாயிலாதல் கொள்க.

“கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கி