நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2718
Zoom In NormalZoom Out


 

மாறு கூறுகின்றது.

(இ-ள்.)  நோயும் இன்பமும் இருவகை  நிலையிற் காமம் கண்ணிய
மரபிடை தெரிய - துன்பமும் இன்பமுமாகிய இரண்டு நிலைக் களத்துங்
காமங்  கருதின வரலாற்று முறைமையிடம் விளங்க ; எட்டன் பகுதியும்
விளங்க - நகை முதலிய மெய்ப்பாடு எட்டனுடைய கூறுபாடுந் தோன்ற
;  அறிவும்  புலனும் வேறுபட நிறீஇ இரு பெயர் மூன்றும் உரியவாக -
மனவறிவும்     பொறியறிவும்    வேறுபட    நிறுத்தி    அஃறிணை
யிருபாற்கண்ணும்  உயர்திணை  மூன்றுபொருளு முரியவாக ; அவரவர்
ஒட்டிய  உறுப்புடையது போல் உணர்வுடையது போல் மறுத்துரைப்பது
போல்   நெஞ்சொடு  புணர்த்தும்  -  கூறுகின்ற  அவரவர்  தமக்குப்
பொருந்திய   உறுப்பெல்லாம்   அதுவுடையது   போலவும்  உணர்வு
உடையது  போலவும்  மறுமாற்றம்  தருவது  போலவும் தந்நெஞ்சொடு
புணர்த்துச்சொல்லியும்     ;    சொல்லாமரபினவற்றொடு    கெழீஇச்
செய்யாமரபிற்   றொழிற்படுத்து  அடக்கியும்  -  வார்த்தை  சொல்லா
முறைமையுடையன   வாகிய  புள்ளும்  மாவும்   முதலியனவற்றோடே
அவை  வார்த்தை  கூறுவனவாகப்  பொருந்தி அவை செய்த லாற்றாத
முறைமையினை  யுடைய  தொழிலினை  அவற்றின் மேலே  ஏற்றியும்;
உறுபிணி  தமபோலச்  சேர்த்தியும்  - அச்சொல்லா மரபினவை உற்ற
பிணிகளைத்  தம்   பிணிக்கு  வருந்தின   போலச்  சார்த்திக்கூறியும்;
உவமம்   ஒன்றிடத்து   உவமவாயிற்   படுத்தலும்  -  அம்மூவகைப்
பொருளை   உவமஞ்செய்தற்குப்   பொருந்து   மிடத்து  உவமத்தின்
வழியிலே  சார்த்திக்  கூறுதலும்  ;  இருவர்க்கும்  உரியபாற் கிளவி -
அத்தலைவர்க்குந்  தலைவியர்க்கு  முரிய  இலக்கணத்திற் பக்கச்சொல்
எ-று.

தெரிய     விளங்க உரியவாகப் புணர்த்தும் அடக்கியுஞ் சேர்த்தும்
அவற்றைப்  படுத்தலும்  இவ்விருவர்க்குமுரிய பாற்கிளவியென முடிக்க.
‘அவரவ’    ரென்கின்றார்   அகத்திணையியலுட்   பலராகக்   கூறிய
தலைவரையுந்  தலைவியரையும்.  ‘இருவ’  ரென்றதும்   அவரென்னுஞ்
சுட்டு. நெஞ் சென்னும் அஃறிணை யொருமையைத் தெரியவிளங்