இது
முற்கூறிய ஏழனுள் தமக்கென நிலம் பெறுவனவும், நிலம் பெறாதனவுங் கூறுகின்றது. (இ-ள்)
அவற்றுள்-முற்கூறிய ஏழு திணையுள்; நடுவண் ஐந்திணை - கைக்கிளை பெருந்திணைக்கு நடுவுநின்ற ஐந்தொழுக்கத்தினை; படு திரை வையம் பாத்திய
பண்பே - ஒலிக்குங் திரைசூழ்ந்த உலகிற்கு ஆசிரியன் பகுத்துக்கொடுத்த இலக்கணத்தை; நடுவணது
ஒழிய -நடுவணதாகிய பாலையை அவ்வுலகம் பெறாதே நிற்கும் படியாகச் செய்தார் எ-று. எனவே, யானும் அவ்வாறே நூல் செய்வ லென்றார். உலகத்தைப்
படைக்கின்ற காலத்துக் காடும் மலையும் நாடுங் கடற்கரையுமாகப் படைத்து, இந்நால்வ
|